Friday, November 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நிலத்தில் வாழ்ந்து அனுபவித்த பிறகு

நிலவில் பறக்க ஆசையே


 பெண்ணின் மனதில் சிறுமையில்லை 

தனக்கென்று ஒரு வாழ்வு அமையாத வரை

கடக்கும் பாதை தொலைவில்லை

யாவும் அண்மையில் கிட்டும் வரை

தொலைத்த நாட்கள் திரும்புவதில்லை

என்றும் அவை நினைவுகள் என்று

அறியும் வரை


 தேவை யாதும் தீர்ந்த பின்னே

பறப்பேன் நானும் தீர்க்கமாய்

ஓர்நாள்

நீல வானம் நீள்கையில் கூட

நினைத்தே செல்வேன்

வானிலும் ஆராய பல

உண்டு என்று

அதில் வெற்றி கொள்வேன் விரைவில்

பூமியில் மானிடனின் 

மனம் இதுவென்று

அறியா போது 

வானத்தில் கிடைக்கும் வெற்றி

அற்பமே!

அண்டத்தில் சிறந்தது

எதுவோ?

அறிய முற்பட மனமும்

சொன்னது

எல்லாவற்றிலும் வெற்றி தேடாதே

உன் அமைதியை

 தொலைப்பாய் என்று

Thursday, November 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 இதயத்தை பிளவுபடுத்த கூர்மையான

கத்தி தேவையில்லை

அழகான மலரும் இதயத்தை

பலவீனப்படுத்தும்


 இதயத்தை குத்தி விட்டு

மலர் கொண்டு அஞ்சலி 

செலுத்தும் உலகம் இது


மலரின் மென்மைக்காக குத்துப்பட்டாலும்

இதயம் ரணமாவதும் புதிதல்ல இங்கே


முதல் முறை கத்தியால் குத்திய

பின் ரணமாக்கும் இதயத்தை

எவ்வளவு முறை குத்தினாலும்

மீண்டும் மீண்டும் வலி 

நீளுவது போல

மலருக்காக காத்திருப்பேன் என்றே

சொல்லுவான் காதலன்

அவன் தியகத்திற்காக இறுதியில்

கிடைப்பதும் மலரே

ஆனால் தலையில் சூட்டிக் கொண்டு

கொண்டாட அல்ல

உடலில் மாலையாய்

அவன் உயிர் அஞ்சலிக்காக


 கண்ணில் தெரிவது மலராயினும்

முட்களும் உண்டு

அதனுள்ளே

கத்தி போல் உயிரை மாய்க்க

படமும் கருத்தும் by Kiruthika

 


சில சமயங்களில்...

 உன்னுடனேயே

இருந்தால்...

நேரம் ஓடி போகிறது...!..


நீ இல்லாது போனால் 

நேரம் நகர கூட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது...!..


ஏனென்றால்..

கேட்காத செவிகளை காட்டிலும்...

கேட்கும் செவிகளை 

காட்டி கொடுத்து .. 

நல்தகவலை சுமந்து கொண்டு...

தூது செல்லும் 

நீ

துணையாக 

மாறிப்போனாய் ...!..


அளவாக 

இருந்தால் 

நீ

எமக்கு 

வைட்டமின் ...!..

அளவுக்கு ..

மீறிப்போனால் 

நீயே

வியாதி...

கண்ணுக்கும்...

மனசுக்கும்...

மூளைக்கும்...!...


இரு...

கொஞ்சம் -

கொஞ்ச

நேரம் 

தூர இரு...!..


அப்போது தான் ..

பக்கம் வர ...

முயற்சியாவது

செய்யும்

உடன் இருப்புகள்...

உறவுகள்...!!!...

Wednesday, November 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


கைக்குட்டை போல் உள்ளங்கையில் அடங்கி

எங்களின் உயிர் மூச்சானாய் 


சிறு குழந்தை போல் உன்னை பற்றிக் கொள்ள எங்களை

பழக்கப்படுத்தினாய்


காதலே கசந்தாலும் எங்கள் வாழ்வில் நீ விருட்சமானாய்


விரும்பும் இடம் செல்ல நீயும் துணையானாய் 


காணும் காட்சியை படமாக்கி அதை அடுத்தவரின் பார்வைக்கு சொந்தமானாய்


உன்னை நாங்கள் பிரியாமல் இருக்க அவ்வப்போது உனக்கு நீயே உயிர் கொடுத்து கொண்டாய்


தோப்பாய் இருந்த எங்கள் குடும்பத்தை தனி மரமாக்கினாய்


இதுவே உன் சாதனை

முன் சந்ததியினர் சொல்வர் இது வேதனை என்று

இன்றைய சிந்தனைகள் by Veena Shankar

 


இன்றைய சிந்தனை (3)

1) தேவையில்லாதது மனதில் தங்கி விட்டால் தேவையுள்ளது தங்க வாய்ப்பற்று போகும்

2) பொறுப்பற்ற வாழ்க்கையும் துறக்கும் விலை மதிப்பற்ற மனிதத்தை

3) இருப்பதும், இருப்பதில் கிடைப்பதும், கிடைப்பதில் மகிழ்வதும், மகிழ்வதில் பகிர்வதும் , பகிர்வதில் சிறப்பதும், சிறந்து அதில் வாழ்வதும் கொடையே!

4) மணம் தரும் உதிர்ந்த பூக்கள் கூட திரவியம் தரும் போது நிலையில்லா நம் மனமும் ஓர் நாள் பக்குவப்படும்

5) ஒருவரை ஒருவர் ஏற்றி விடும் மனது இருந்தால் போதுமானது. தாங்கி பிடித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை

6) நம் உறவுகளுக்குள் பந்தம் தொடர எண்ணினால் மறதியும் தொடரும் என்பதே உண்மை

7) பாரத்தை சுமப்பது மட்டுமே கடினமல்ல , பிறர் நம்மீது கூறும் ஆதாரமற்ற குற்றத்தையும் தாங்குவது கடினமே!

8) ஒருவருக்கான மதியும் மதிப்பும் அனுமதி கேட்டு வருவதில்லை.

9) வயது என்பது ஒரு எண் மட்டுமே, எப்போதும் ஒருவனின் அனுபவமே அவன் உண்மையான வயது.

10) சொப்பனம் கூட கசக்கிறது வாழ்க்கையில், அது நமக்கு எதிராக இருக்கும் போது மட்டும்

11) மனதில் தூக்கம் , செயலில் தேக்கம், 

12) தேடலின் ஆரம்பம் எது என தேடியதில் உணர்ந்தேன் தேடலுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்று

13) வென்றவன் பேச்சில் மகிழ்ச்சி தெரியும். தோற்றவன் பேச்சில் அவன் அடுத்து அடையப் போகும் வெற்றி புலப்படும்

14) நாம் நினைப்பது நடந்தால் நம்மை மீறிய சக்திக்கு மதிப்பு இல்லை

15) தெளிவான சிந்தனை மட்டுமே தெளிவான பாதையை காட்டும். தெளிவான பாதை மட்டுமே தெளிவான வாழ்க்கையை கொடுக்கும்

16) அழகை ஆராதிப்பதிலும் ஓர் அளவு உண்டு, அது வார்த்தையால் எல்லை மீறாத வரை. வார்த்தைக்கும் ஓர் அளவு உண்டு, அது அடுத்தவர் கோபம் கொள்ளாத வரை.

17) பிறப்பின் முடிவு மடிவதில் இல்லை. வெற்றியின் முடிவு நம்மிடம் இல்லை புகழின் முடிவு அடைவதில் இல்லை ஆனால் நம்பிக்கையின் முடிவு முயற்சியில் மட்டுமே உண்டு.

18) உணர்வின் வெளிப்பாட்டில் வருவதே நம் ஆசையும் தேவையும்

19) நாம் முதல் எட்டு வைக்கும் போது நம்மை எட்டி விட்டவர்கள் யாவரும் நம்மை எட்ட நின்று காண்பர் பின்னாளில் நம் வளர்ச்சியின் பலனாய்

20) தனிமை தான் வலிக்கான மருந்து என்று தெரிந்த போதும் அதன் வழி வலி குறையவில்லை என்றால் அடுத்து என்ன செய்யக் கூடும் என்பதை தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சிறந்தது

21) ஏணியின் வேலை ஏற்றி விடுவது மட்டுமே, அதுவும் கர்வம் கொண்டு ஏற்றி விட மறுத்தால் நம் நிலை சமதளமே!

22) பொய்யில் உள்ள உண்மையும் கோபத்தில் வரும் பொறுமையும் என்றும் சிறந்தது

23) நம் எண்ணங்களுக்கு ஓர் முடிவு இல்லாதவரை வாழ்க்கையும் நம்மை ஏமாற்ற தான் செய்யும்

24) உறவு என்னும் பூவை மாலையாக தொடுப்பதும் , தொடுத்த மாலையை பூக்களாக உதிர்ப்பதும் நாம் அனுசரித்து போவதிலே!

25) அடுத்த மனிதனின் குணத்தை அறிந்து கொள்ள நினைப்பதை விட, நாம் அவனுக்கு நம் குணம் அறியும் படி வாழ்வோம்

26) ஒரு பொருளின் நுட்பம் அறிய கேள்வி சிறந்தது. அதைவிட அதனின்று, பல கோணங்களில் அறியப்படும் பதிலும் சிறந்தது.

27) விரக்தி வந்த பின்னும் வாழ்வில் விடியலும் வருமே! மனம் என்னும் கோட்டையில் இருப்பதும் விலகுவதும் தேவையே! எதுவும் எளிதில் கிடைத்து விட்டால் தெய்வம் கூட மனதில் தங்காது

28) குறை காணும் மனது இறுதி வரை திருப்தி கொள்ளாது. அடுத்தவரின் தேவையையும் தம்மை தாமே பூர்த்தி செய்து கொள்ள விடாது

29) உடைபடாமல் இருக்கும் வரை நீர்குமிழியும் மனித உறவும் ஒன்றே

30) விவாதங்கள் தொடர, யார் மீது குற்றம் உள்ளது என்பதை ஆராய்வதை விட அடுத்து அது நிகழாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் சிறந்தது.

31) பொறுமையில் சிறுமை கொண்டால் பெருமையிலும் வறுமை வரும்

32) ஒருவர் நம்மை விட்டு விலகுவதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அந்த ஒருவர் நம்மை நெருங்குவதற்கு அன்பு என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

33) வீட்டில் ஒருவர் துக்கப்பட்டாலும் அழத் தெரிந்தவள் பெண். பிறர் இன்பத்தின் போது மகிழத் தெரிந்தவள், அவள் தன் துக்கத்தை மறந்து

34) காலடிகள் கூட பசுமையாகும் உன் பார்வையையும் பாதையையும் சரியாக தேர்ந்தெடுத்தால்

35) மற்றவர் நம்மை புரிந்து கொண்டு சண்டையிடுவதை விட அவர்களுக்கு நாம் புரியாத புதிராகவே இருந்து விடலாம்

36) சோகத்தில் வந்தாலும் மகிழ்ச்சியில் வந்தாலும் கண்ணீர் கரிக்கத் தான் செய்யும், அதற்காக நாம் துக்கத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. அது போல தான் திருமண பந்தமும், சில நேரம் சிறப்பாய் அமையும். சில நேரம் வெறுப்பாய் இருக்கும். அதை சரியாய் புரிந்து கொண்டு கடப்பதே சிறந்தது.

37) நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓர் கதை இருக்கும். அதை மறப்பதும் கதையை தொடருவதும் எழுத்தாளரான நம் கையிலே

38) சில நேரங்களில் உண்மை சொல்வது கூட பாதகமாக அமையும், என்றாலும் மனதில் உறுத்தல் இல்லாமல் உயர்ந்து விடுவோம்.

39) பிறருக்காக உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டே இருந்தால் உங்கள் கருத்தில் எப்போதும் ஒர் நிலைப்பாடு இருக்காது

40) கூட்டுக் குடும்பம் சிதைந்ததால் விலகியது உறவுகள் மட்டுமல்ல உணவுகளும் உணர்வுகளும் தான்

41) தேடும் யாவும் கிடைப்பதில்லை தேடிய யாவும் நிலைப்பதில்லை தேடாதவை என்றும் தானே அமைவதில்லை

42) நம்மிடம் ஒன்றுமில்லை என்று நினைப்பதை விட, ஏதோ ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கடப்பதே சிறப்பு

43) மனதிலும் உடலிலும் துணிவும் பணிவும் கொண்டால் செய்யும் பணி சிறக்கும்.

44) தேவை என்ற தேடலிலேயே மனிதனின் பயணம் தொடர்கிறது நித்தமும். எல்லையில்லா தேடலுக்கு முற்றுப்புள்ளி வைப்பவனும் படைத்த அவன் ஒருவனே!

45) கண்ணாடியில் தெரியும் பிம்பம் அல்ல வாழ்க்கை நீ சிரித்தால் சிரிக்க, நீ அழுதால் அழ. அது கண்ணாடி போன்றது, கவனமற்று கையாண்டால் உடைந்து விடும்.

46) நீ விருப்பப்பட்டு செய்யும் செயல் உன்னை முன்னேற்றும், கடமைக்காக நீ செய்யும் செயல் உன்னை சார்ந்தவரை பின்னேற்றும்.

47) எதிர்பார்ப்பதில் ஏமாற்றம் இருப்பது போல ஏமாற்றமும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்க மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்

48) பல கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே நம் காலமும் வலிமையும் தேய்கிறது

49) எந்த உறவுகளையும் குறையில்லாமல் தொடருவது என்பது பெருங்கலையே.

50) இல்லம் , கண்ணாமூச்சி ஆடும் இடமல்ல, அங்கே ஒளிவு மறைவோடு வாழ்வதற்கு

Monday, November 25, 2024

இன்றைய சிந்தனைகள் by Veena Shankar

 


இன்றைய சிந்தனை (2)

1) தேவையுள்ள இடத்தில் நீ வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாய் கூட இருக்கலாம். ஆனால் உன் அவசியம் அந்நியமாக்கப்படும் இடத்தில் வான் நீராய் கூட இருக்காதே.

2) வலிகளும் நம் உள்ளத்தை மறுத்து போக செய்யும்.அதனை புறந்தள்ளி கொள்ளும் வெற்றி மட்டுமே நம் வாழ்வை நிலைநிறுத்த செய்யும்

3) பிரிந்து போன நட்பை உயிர்ப்பிக்கும் முன் பிரிவின் காரணம் தெரிந்து கொள்ள முனைவது வீண் செயல்

4) தீபம் எரிவதும் அணைவதும் காற்றினாலே! நம் வாழ்வின் பலன்களும் நம் வார்த்தையாலே!

5) மலரிடம் சிநேகம் கொள். அதன் மலர்ச்சி உன்னை புன்னகைக்க வைக்கும் எந்நாளும்

6) அடுத்தவருக்கு நீ கடவுளாக தெரிய வேண்டிய அவசியமில்லை, அவருக்கு நீ மனிதனாக மட்டும் இருந்தால் போதும்

7) வினாக்கள் பலவற்றிற்கு மௌனம் பதில் என்றால் வினாவும் மௌனமாகி போகும் அங்கே

8) இருப்பதை விடுப்பதும் இல்லாததை தேடுவதும் தான் வாழ்க்கை. இதில் தொலைப்பதும் துறப்பதும் அவரவர் மனதை பொறுத்து

9) எதுவும் எளிதாய் கிடைத்தால் கிடைத்ததில் மகிழ்ச்சி என்பது சொற்பமே. வடுவோடு கூடிய வெற்றியே மனதில் என்றும் நிலைக்கும்.

10) புன்னகை ஒன்று போதுமே, மனதில் பொதிந்துள்ள துக்கம் திசை மாற

11) எந்த நாளும் உழைப்பவருக்கு சொந்தமே! கோஷப் போற்றுதல் இல்லையென்றால் உழைப்பும் போற்றப்படும் ஆங்கே

12) ஒரு காயத்தின் வலியை உணர்ந்த பின் மீண்டும் அந்த செயலை செய்து வெற்றி கொள்வதோ அதை விடுப்பதோ நம் மனம் பொறுத்து

13) யாரும் வருவார் யாரும் போவார் நம் வாழ்க்கை பயணத்தில் அதில் வெகு சிலரே உடன் பயணிப்பர்

14) ஒருவர் வலிய ஏற்ற செயலின் வலிமையாவது யாதெனில் அவர் தன் பொறுப்பு அறிந்து செயல்படுவதே

15) பேசுவதை குறைத்து கொள்வதால் மட்டுமே மதிப்பு உயராது. அடுத்தவரின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து உயர வேண்டும்

16) ஆறுதல் தரும் பேச்சும் விலகி நிற்கும் சில நேரங்களில் அனாவசிய புலம்பல்களால்

17) அன்பு காட்டும் உள்ளங்களில் சிறை பறவையாக கூட வாழ்ந்து விடலாம். ஆனால் குழப்பாமான நெஞ்சங்களில் பருந்தாக கூட இருக்க முடியாது

18) உன்னை பற்றி பிறர் தவறாக விமர்சித்தாலும் அவர்கள் பார்வை போலவே நீயும் இருந்து விடு. அவர்களாவது அதில் மகிழ்ச்சியடையட்டும்.

19) வாழ்க்கையில் விரோதிகளையும் மதியுங்கள், அவர்களே உங்கள் வளமான பாதைக்கு உரமிட்டவர்கள்

20) அறியாமையின் வெளிப்பாடு கோபமாகவும் இருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம். முன்னது மதியை குறைக்கும், பின்னது இருளை நீக்கும்

21) கலங்கிய மனதில் உதிக்கும் எண்ணமானது தெளிவில்லாத நீரோடையில் முகத்தை பார்ப்பதற்கு சமம்

22) தேடுதலின் பலன் சிறியதோ பெரியதோ, அதனின்று பிறக்கும் திருப்தி பெரியது

23) ஒருவர் மற்றொருவரிடம் அடங்கி போவதும் இயலாமையால் அல்ல, அடக்குபவரின் ஆளுமை இழந்து போகாமலிருக்கவே !

24) எதிலும் திருப்தியடையா மனம் காணும் அடுத்தவரின் குறை மட்டுமே

25) எல்லை மீறா வார்த்தை சொல்லும் உறவிற்கு எல்லை இல்லை என்று

26) அகண்ட பார்வை இருண்ட வாழ்வை அகற்றும்

27) எல்லோரிடமும் ஓர் சோகம் ஒளிந்துள்ளது. அதை அடக்கி ஆழ்வதும் வெளிப்படுத்துவதும் அவரவரின் விருப்பத்தை பொறுத்து

28) எதையும் தாங்கும் இதயமும் வருந்தும் தன்னுடலின் அங்கம் விமர்சிக்கப்பட்டால்

29) உன் நீண்ட பயணத்திலும் எல்லைகள் உண்டு, அந்த எல்லையும் ஆரம்பம் ஆகும் மற்றவர்களுக்கு

30) கறை கொண்ட உள்ளம் கரை காணாது , மனம் கொண்ட இடத்தில் மணம் அகலாது

31) தேவை என்பதை நீ ஆட்கொண்ட பின், நீ காண்பது யாவும் உன் தேவையே!

32) பிறருக்கு அள்ளிக் கொடுத்து கிள்ளிப் பெறுவது இன்பம்

33) தன் கேள்விக்கு விடை தெரியாதவன், பல சமயங்களில் அடுத்தவருக்கு விடையாக தெரிவதும் உண்டு

34) இன்பத்தில் கொள்ளும் துன்பத்தை விட துன்பத்தில் பிறக்கும் இன்பம் சிறப்பு!

35) நிலைத்த வாழ்வு நிலைக்க சுவை கூட்ட வேண்டும் நகைப்பு என்னும் செயலாலே!

36) கண்ணில் காண முடியாத ஒருவரை நம் அகத்துள் உணர்வதே சிறப்பு

37) எதை பெறுகிறோம் என்பதை விட எதை இழக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வது வாழ்விற்கு சிறப்பு

38) வாய்ப்பு பல முறை நம் வாசல் படி வரை வந்தாலும் மனம் என்னும் கதவு திறந்தால் மட்டுமே வெற்றி கிட்டும்

39) நாட்கள் செல்ல செல்ல நம்மை புண்படுத்தியவரை கூட மன்னித்தும் நினைவிலிருந்து அகற்றியும் விடுகிறது நம் மனம்

40) இழப்பும் வெற்றிக்கு படி தான். ஆனால் மீண்டும் படியில் ஏறும் போது பிடி தளராமல் இருக்க வேண்டும் வெற்றிக் கனியை இனிதாய் ருசிக்க

41) வலிகள் மட்டுமே துணையான உள்ளத்தில் மொழிகள் மௌனமே!

42) நம் சோகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்தாலும் அதற்கு மறுபேச்சு சொல்லாதவன் கண்ணாடி ஒருவனே!

43) மருந்தும் சிறந்தது அது தேவைப்படும் போது மட்டுமே ; அது போலத்தான் உறவுகளும் நட்புகளும் சிலர் கண்ணோட்டத்தில்

44) தங்கள் சுய அடையாளத்தை தொலைத்தவர்களுக்கு ஆதார் கார்டும் தேவை தானா?

45) நாம் அறிவாய் செயல்பட்டும் தோற்றுப் போகிறோம் என்றால் இன்னும் கூடுதல் முயற்சி தேவை என்பதே உண்மை

46) எதுவும் கடந்து போகும் என்றாலும் கடந்த வந்த பாதையும் அனுபவமே

47) கல்லானது தானும் கரையாது,அடுத்தவராலும் கரையாது. அதுபோலத்தான் நம்மில் ஒளிந்திருக்கும் பொறாமை குணமும்., நம்மையும் வாழ விடாது, அடுத்தவரையும் வாழ விடாது.

48) இன்று ஒன்றாக கூடி மகிழ்வது மட்டுமே நட்பல்ல , பின்னாளில் துக்கத்திலும் நிலையாக நிற்பதே நட்பு.

49) அனுபவமும் ஓர் வெகுமதியே, அடுத்தவர் இலவசமாக கொடுப்பதால்

50) அதீத பேச்ச்சினாலும் அதனின்று வெளிவரும் எதிர்மறை விமர்சனத்திற்கு பின் வரும் அடக்கமான வார்த்தைகளும் நம் அனுபவத்தின் வெளிப்பாடே!

Friday, November 22, 2024

இன்றைய சிந்தனைகள் by Veena Shankar

 


இன்றைய சிந்தனை (1)

1) விதை பெரியதானாலும் சிறியதானாலும் அதில் பிறக்கும் தாவரம் தரும் பலன் என்றுமே தனித்துவமானது

2) மனைவியின் இழப்பால் கணவனுக்கு கிடைப்பது வெற்றிடம் கணவனின் இழப்பால் மனைவி தேடுவது புகழிடம்

3) சுவர் : மனிதனின் தனிமைக்காக உருவாக்கப்பட்டது தான் சுவர்

4) விடை தேடி அலையும் கேள்விகளுக்கு காரணம் ஒன்று இருக்கும் அவரவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது என்பது இல்லை வாழ்வில், தெரியாது என்ற வார்த்தையை பிரயோகிக்காத வரை

5) உயர்வாக நீங்கள் இருப்பதை விட அடுத்தவருக்கு உதாரணமாக இருந்து காட்டுங்கள். அடுத்தவர் வாழ்வு சிறக்கட்டும்

6) பிறருக்காக என்று செய்யும் செயலில் நாம் நம்மை தொலைக்கிறோம் என்பதே உண்மை

7) உண்மையின் தத்துவத்தை சொல்ல பாடங்கள் கற்க வேண்டியதில்லை. சிறந்த கருத்தும் மொழியறிவும் போதும்

8) அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயானா லும் அதற்கு முதல் பசியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்கவும் சமாளிக்கவும்

9) துன்பத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள். அதை நினைத்து வருத்தபட்டாலும் அந்த துன்பம் உங்களை விட்டு விலகவும் காலம் எடுத்து கொள்ளும்

10) நியாயத்திற்காக வாதாட வேண்டும். அந்த வாதமும் நியாயமாக இருக்க வேண்டும்

11) மெய்யே மெய் இல்லை என்றான பின் மெய்யை மெய் கொண்டு போற்றுவதும் வேண்டுமோ?

12) கண்ணாடியும் அதில் தெரியும் பிம்பம் போன்றது நம் உணர்வும் முகமும். உணர்வு எப்படியோ அதையே பிரதிபலிக்கும் நம் முகம்.

13) பிறர் பார்வைக்கு எப்போதும் நாம் தவறாக தெரிந்தால், தவறு நம் மீது தான். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நாம் தவறாக தெரிந்தால் அவர்கள் பார்வையில் தான் தவறு.

14) அழகு : ரசனையும் ரசிப்பும் கொண்ட இடம்

15) இறந்த காலத்தில் நடந்தவையை நிகழ்காலத்தில் கடப்பதற்குள் எத்தனை வருத்தங்கள், வலிகள்? மறதி ஒன்றே வழி, எதிர்காலத்தை கடக்க.

16) இல்லம் , உறவுகளின் பிணைப்பு உணர்வுகளின் பிரதிபலிப்பு.

17) சங்கிலி போன்றது உறவு. உராய்வு கொள்ள கொள்ள தேயும் சங்கிலியும் உறவும்.

18) நீரில் மிதப்பது துளசியே என்றாலும், ஒருநாளுக்கு மேல் அது தண்ணீரில் இருந்தால் , துளசி அழுகி அந்த நீரின் சுவை மாறிவிடும். அது போலத்தான் உறவுகளும்

19) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்

20) நல்லவனாக இருக்கும் போது பெயரை உச்சரிக்க தவறும் மனித மனம், கெட்டவனாக மாறும் போது மட்டும் வாயை பூட்ட மறுப்பதேன்

21) வெற்றியும் தோல்வியும் சமமே. தோல்வி வாழ்வின் சுடரை ஏற்ற, வெற்றி வாழ்வின் சுடரை மெருகேற்ற

22) உழைப்பிற்கான வேர்வைதுளி அவரவருக்கு தரும் மகிழ்ச்சியான மழைத்துளி

23) பிறருக்கான அழுகையும் வலியும் அவர்கள் உணராத போது அவை என்றும் வீண்.

24) கடந்து விட்ட வாழ்வில் கரைந்து போன நிஜங்கள் என்றும் நினைவுகளே

25) காகிதங்கள் பெட்டகமாகவும் போது அதன் எழுத்துக்கள் பொக்கிஷங்களாகும் பின்னாளில்

26) நம் வலிகளுக்கு மருந்தாகும் அடுத்தவர் வலியை உணர்கையிலே

27) கண் கொண்டு பார்க்கும் காட்சி யாவும் அழகே! அதன் உண்மை மறந்தால் வாழ்வில் பின்னோட்டம்

28) திருப்தி அடையாத வாழ்வு மேன்மை அடைவதில்லை

29) பொறுத்து போகிறவர்களுக்கு சுமை அதிகம். பிறரை காயபடுத்துவோருக்கு மறதி அதிகம்

30) சுகவீனமான போது பக்கம் இருக்கும் ஒளடதம், சுகமான பின் எட்டி வைக்கப்படும்.

31) குளத்தில் எறிவது ஓர் கல்லேயானாலும் அதனின்று காணும் அதிர்வலைகளே கல் எறிந்தவர் கொள்ளும் வெற்றி

32) காலம் பின்னோக்கி சென்றால் நினைவுகளின் நிகழ்வுகள் இருக்கும். ஆனால் அதை உணர முடியுமே தவிர அனுபவிக்க முடியாது.

33) தேவையில்லாத இடத்தில் காய்ந்த சருகாய் இருப்பதை விட தேவையுள்ள இடத்தில் உரமாய் இருப்பது நலம்.

34) ஒன்றை இழந்த பின் அதனால் விளையும் நன்மையை கொடுத்தவரால் சுவீகரிக்க முடியாது

35) கண்ணீர், பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல ; ஆண்களுக்கு விதிவிலக்குமல்ல

36) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்

37) இருட்டில் சில மணித்துளிகள் இருந்தால் அதிலும் ஒரு வித வெளிச்சத்தை உணர முடியும். அதுபோல் தான் வாழ்க்கையும்

38) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்

39) எதுவும் சிறப்பே, பிறரை பார்த்து புன்முறுவல் பூப்பதும் பிறரை சிரிக்க வைத்து பார்ப்பதும்

40) கலைஞன் என்பவன் ஒவ்வொரு நாளும் புது மாணவனே! தான் வடிக்கும் கலையில்

41) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்

42) படித்த நல்லவை யாவும் நம் வழக்கமானால் வடுக்கள் இல்லை

43) உதிர்ந்த , காய்ந்த பூக்கள் கூட மெத்தையாகும் முள் படுக்கையை விட

44) நினைவுகள் அலாதியானது அதை நினைக்கும் தருணம் அமைதியானது

45) அம்மாவின் புடவை திரைச்சீலையானது என் வீட்டு வாசலில் அவளும் சிலையானால் என் மன கோட்டையில்

46) எந்த ஒரு நிகழ்வின் பயணமும் தொடரும் என்பதை அறியாத ஓர் புள்ளியே ஆரம்பம்

47) குறை மட்டுமே தேடினால் காணும் காட்சிகள் யாவையும் பிழையே

48} தன்னை எளிதில் சுருக்கி கொள்வது எழுதுகோல் மட்டுமல்ல அடிபட்ட மனமும் தான்

49) பிறர் உங்களை தூற்றினாலும் அது போலே வாழ்ந்து விடுங்கள். தூற்றலும் ஓர் நாள் தானாகவே மறையும்

50) கிடைப்பது எளிதானால் வளர்ப்பது கடினமாகும்

Thursday, November 21, 2024

படமும் கருத்தும் by Shanmugapriya

 


காலையில் உன் சிந்தை 

கண்ணம்மா  

என் மண்டையில் 

ஓடுதடி கண்ணம்மா 


பார்க்கும் பகல் எல்லம் 

கண்ணம்மா 

உன் போல் காட்சி தெரியுதடி  

கண்ணம்மா 


வாங்கும் மூச்சினிலே  

கண்ணம்மா 

உன் வாசம் தோன்றுதடி  

கண்ணம்மா 


சோற்று பருக்கை எல்லாம்

கண்ணம்மா 

உன் முகம் தோன்றி மறையுதடி 

கண்ணம்மா 


ஆற்றில் குளிக்கையிலே  

கண்ணம்மா 

உன் தேகம் தெரியுதாடி 

கண்ணம்மா 


தூங்கும் வேலையெல்லாம் 

கண்ணம்மா 

கண்கள் ஏக்கம் கொள்ளுதடி 

கண்ணம்மா


(கண்ணம்மாவை பாரதியிடம் 

கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)


----பிரியா

படமும் கருத்தும் by Veena and Vidhya



 Veena Shankar: தியாகம் எனும் சுடரில் மறைக்கப்பட்டிருப்பது கணவன் மனைவியின் புரிதலே

Veena Shankar: தீபத்தை ஏற்றுவது பெண் என்றாலும்

அதில் கரைபவன் ஆண் கூட தான்

Veena Shankar: நீரும் நெருப்பும் பற்றிக் கொள்ளுமா?

நீர் எது ? நெருப்பு எது?

நீரும் தணிக்கும் நெருப்பை

நெருப்பும் தணியும்

நீரால்

தட்டிக் கொடுத்து விட்டுக் கொடுக்கும் யாவும்

தரு போல் வளரும் மேன்மையால்

தருவின் பக்க கிளைகள் களைய 

பருமனோடு வளர்ச்சி

தரும் தருவும்

வாழ்வும் அதுவே அவசியமுள்ளத கொண்டு

பிற களைய மனதும் உடலும் வலுப்பெறும்

தெளிய வேண்டியவை பல இருக்க

நீயா? நானா? என்ற

தர்க்கமும் வேண்டுமோ?

தாக்குதல் பேச்சில்

ஆக்கும் வெறுப்பே!

வென்ற பின் அடையும் மமதையும் 

தோற்ற பின் எழும்

உத்வேகமும்

அணையும் நெருப்பு போல் இல்லாமல்

அணைக்கும் நீர் போல் திகழ்வது அறிவே!

 Veena Shankar: உடல் கருகினாலும் ஒளி தரும் இதுவே

அது சுடரன்றி வேறு எதுவே

Veena Shankar: யாரும் உற்று நோக்காத செயல்

உருகுவது மெழுகின் தியாகச் செயல்

உருக்க வைப்பது தெய்வத்தின் செயல்

சுடரும் அதன் வெளிச்சத்தில் 

உயிர் பெறும் 

செயலே ஆக்கத்தின் வெற்றி

Vidhya:

தியாகத்தின் தீபச்சுடர் ,கடைசி நுனி வரை எரிய தன்னையும் தந்தாள் தாய்!

தாயையும்,தந்தையும்,மனைவியும் கணவனும் மட்டுமே உலகறியும் பல நேரம் மறந்த உண்மை, சகோதரிகள்,சகோதர்கள்,நண்பர்கள் கூட தீபச்சுடரே!

ஒரு சமுதாயை உயர்த்த தேவையென்றால் தன்னையும் தரும் மாமனிதர்,  கூடவே துணைக்கு வரும் தோழர்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


கண்ணம்மாவை பாடிய பாரதியும் கையில் கோலுடன் நின்றானே!


பெண்ணும் நிமிர்ந்து நடக்க வேண்டியே நிரம்ப ஆவல் கொண்டானே!


நிதர்சனம் பேசிய அவனையும் காலன் சீக்கிரம் அழைத்துக் கொண்டானே!


காலம் உள்ள வரை நினைப்பாள் எப்பெண்ணும் அவனையுமே!


இயல்பாய் பெண் விடுதலை பேசி மனதில் அழகாய் புகுந்தானே!


பாரதத்தின் விடுதலை எண்ணி அவனும் எதிலும் விடுதலை வாங்கி சென்றானே!


கவி பாடியே அவனும் வளமை பொதிந்த 

பாரதத்தை உலகறிய

செய்தானே!


நேர் கொண்ட பார்வையுடனே 

சீராய் நடக்க வழி செப்பினானே!


காகிதத்தில் தன் எண்ணத்தை திமிராய், அழகாய் நிரப்பினானே!


எங்கும் கிடைக்கா அவனை போல் இன்னொரு மனிதருமே!


உயிர் உள்ள வரை அவனை நிறைவாய் போற்றுவோமே!

Wednesday, November 20, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 எடைக்கு போய் விடுவானோ என்ற அச்சத்தில்

இதயத்தை பூட்டி வைத்த மூளை


 இவரில் எவர் செயல் 

இழந்தாலும் 

மனித எண்ணிக்கையில் ஒன்று குறைவே


 குருதி பாயும் இதயம்

உறுதி கொண்டால்

சாவியும் தேவையில்லை

மூளையும் தேவையில்லை

மனித உடலை விட்டு பிரிய


 இதயம் இல்லாதவன்

இத மாற்று சிகிச்சைக்காக

காத்து நிற்கிறான்

மருத்துவமனையில்


 மருத்துவமனையில் இதயம் வேண்டி

நிற்பவருக்காக 

பூட்டி வைத்தது மூளை

இதயமில்லாத மனிதன் யாரும்

பணத்திற்காக இன்னொருவருக்கு

கொடுக்காமல் இருப்பதற்கு

இதய மாற்று சிகிச்சை  

இங்கே பண்டமாற்று முறையாக இல்லாமல்

மூளையுள்ள மனிதனால் 

காத்து நிற்கிறது

கூண்டிற்குள்ளே

- Veena 


Tuesday, November 19, 2024

படமும் கருத்தும் by Shanmugapriya

 


பூமியின் பாரத்தை விட 

நம் மனதில் அடர்த்தியில்லா 

சோகமே ஈரேழு லோகத்தை 

விட எடை கூடியது 


"இதுவும் கடந்து போகும்"

 

---பிரியா



உலகத்தில் பூத்த பூக்கள் 

எல்லாம் உன் போல் அழகில்லை 

என் வாகனத்தில் 

ஆண்ட்ரோமெடா சென்று 

அங்கிருக்கும் பூக்களை 

ஆராய்ந்து

 கொண்டிருக்கின்றேன்



--பிரியா

படமும் கருத்தும் by Veena Shankar



 கல்யாண வீட்டு சாப்பாடு 

உண்டவருக்கு திருப்தி பதார்த்தங்கள் நன்றாக இருக்கும் வரை

எச்சில் இலையில் மிச்சம் வைத்தாலும் மகிழ்ச்சியே 

குப்பைத் தொட்டி அருகே

எச்சில் இலைக்கு

காத்திருக்கும் அன்பருக்கு


 வீணாகும் பாதார்த்தமும்

தேவையுள்ளோருக்கு 

யதார்த்தமாய் சேர்ந்தால் சிறப்பே

குதர்க்கமான பேச்சு

வந்தாலும்

குளிர்ச்சியாய் வயிறு நிரம்புமே


 இலைக்கு இவ்வளவு

காசு என்று நிர்ணயித்த பின்னால்

பதார்த்தங்கள் நிரம்பின இலையில்

அவரவர் ஆடம்பரத்திற்கேற்ப

உணவும் மிஞ்சின

தூக்கியும் வீசப்பட்டன

பல மனிதர்களின்

பட்டினியை அறியாது

Monday, November 18, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


Veena Shankar: காலம் மாறும் போது

பகைமையும் மாறும்

தோழமை கொஞ்சும்

தவறில்லை உண்மை அன்பில்

ஏதும் தவறாய் இல்லாத வரை


வலியவனும் வலிய வருவான் எளியவனி டம் நட்பு கொள்ள

எளியவனின் சிறு நிறையையும் பார்த்து


வலியவன் எளியவன் இடத்து நல் உறவு போதும் வலிமையாய்

 Veena Shankar: தஞ்சம் கொள்ள நுகர்ந்த நாசியல்ல இது

புன்னகை பூக்க

நட்பு தொடர  

ஒன்றி வாழ

எதிரியை அழிக்க

மதி இணைய

பூத்த இணை இது

வினையின் விடை காண என்றும்

இதுவே ஓர் விதை

Saturday, November 16, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


என் வாழ்க்கையின் பாதைகளில்

கற்களும் முட்களும் மிகுதி 

இந்தக் கூரிய உலோகங்கள் 

ஒன்றும் என் மனதை

அவ்வளவு சுலபமாக 

சிதைத்து விட முடியாது 

கூர்மை இல்லாத நாக்கே 

பலமுறை என்னை 

கூறு போட்டதுண்டு 

அந்த ஆயுதத்தை

 பயன்படுத்தி விடாதீர் !!!


(நாங்கல்லாம் பிரச்சனையை போர்வையா போத்திட்டு தூங்குறவங்க ஓரமா போவியா)


--பிரியா


Veena Shankar: 

இயற்கை கொடுத்த பாதையும்

 மனிதனின் நடையும் இயந்திரமானது 

அவன் தன் வாழ்க்கையின்

தேடலுக்கான ஓட்டத்தால்

 Veena Shankar: இறுக்கத்திற்காக ஆணியும் 

அதை தளர்த்துவதற்காக உள்ள கருவியும்

அவசியமாகிறது மனிதனின் நடைக்காக

 Veena Shankar: ஓட்டத்தின் அவசியம் பொறுத்தே

வாழ்வில் உண்டு ஆட்டம்

வாட்டமாய் இருக்கும் மனதிற்கும்

தேவையாகிறது ஊட்டம் 

காட்டமாய் இல்லாமல் இருந்தால்

பயணத்தில் உண்டு கொண்டாட்டம் 

திட்டம் தீட்டி வாழ்ந்தால் 

இல்லை என்றும் திண்டாட்டம்

Veena Shankar: வலியே வழியாகும் போது 

கடக்கும் யாவும் அற்பமே!

வலியது யாதும் என்றுணர 

வலியும் அற்பமே!

வல்லமை உள்ள நெஞ்சிற்கு ஏதும் அற்பமே!

வல்லவன் எவனோ அவனுக்கு எல்லாம் அற்பமே!

Vidhya:

கலைஞனுக்கு புல்லும் போதும்

 காவியம் படைக்க!

இங்கே இரும்பே துரும்பாக

 கொட்டிக்கிடக்க அவனுக்கு கலை

 படைக்க எம்மாத்திரம்!

 காலின் வலிமையைவிட

 மனதின் வலிமை அதிகம்,

காலில் வரும் ஆணிகளை

 பிடுங்க பிடுங்க

 முளைக்கிறது,அதற்கு

 ஆணியே செருப்பாக

 அணிந்தால் என்ன!


Friday, November 15, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Akhila: இவள் சாவி அவனிடம்🤦‍♂️

அவன் சாவி இவளிடம்🦸‍♀️

இருவரின் சாவியோ குழந்தைகளிடம் 🧑‍🧑‍🧒‍🧒🧑‍🧑‍🧒

 Veena Shankar: வீடு இரண்டாவது கையில் இருக்கும் சாவிகள் இரண்டாவதால்

 Veena Shankar: பிரிந்த மனத்தையும் சிதைந்த வீட்டையும் சேர்ப்பது மன்னிப்பு என்ற திறவுகோலே

 Veena Shankar: சாவிகள் இரண்டு என்றாலும் ஓர் பூட்டே,

வீட்டு வாயிலின் முன்

சிதைந்த இல்லம் சேர

சாவிகள் இரண்டும் தேவையே 

தனியாய் இருந்தாலும் திறக்கும் சாமர்த்தியம் இல்லத்தை சிதைத்து

 Veena Shankar: ஆணின் இயலாமை

இடுப்பில் தஞ்சம் இரு சாவிகளாய்

Veena Shankar: பிரிந்த மனத்தையும் சிதைந்த வீட்டையும் சேர்ப்பது மன்னிப்பு என்ற திறவுகோலே


சாவிகள் இரண்டு என்றாலும் ஓர் பூட்டே,

வீட்டு வாயிலின் முன்

சிதைந்த இல்லம் சேர

சாவிகள் இரண்டும் தேவையே 

தனியாய் இருந்தாலும் திறக்கும் சாமர்த்தியம் இல்லத்தை சிதைத்து


தனி வீடு தனி ராஜ்ஜியம்

தனி திறவுகோல்

தனி திறமை

சேர்ந்து கூட வாழும் 

மனம் ஒன்றுபட்டால்

Vidhya:

அவளும் அவனும்

சாவியும் வீடும்

மண்ணும் பொன்னும்

முன்னும் பின்னும்

அதுவும் இதுவும்

எதுவும் சரிசமம் 

நம் முன்னே

பார்போருக்கு விரிசல்

நமக்கோ புரிதல்,

அன்பின் தேடல்!




Thursday, November 14, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Kiruthika: 

உங்களுக்கு -

பிடித்தவர்கள் செய்யும்

வேலை பற்றி உங்களுக்கு புரிய வில்லை என்றாலும் பரவா இல்லை...!..


நீங்கள் புகழ கூட வேண்டாம்...

Atleast 

இகழாது இருங்கள்..!.


Always remember -

உடைந்த கண்ணாடியை 

என்னதான் ஒட்டினாலும்..

மறுபடி முன்பு போல ஆகாது ..!..


 Akhila: வசை பாடும் மனிதரை ஒதுக்கி… 

இகழும் உலகை தள்ளி வைத்து…

துள்ளி வா மனமே…!

அகிலம் பெரியது!!!!

Veena Shankar: யாருக்காக இந்த

 வண்ணம் கொண்டாள் ?

தனக்குள்ளும் தூரிகையிலும்


யாருக்காக மாற்றம் கொண்டாள்?

மனதாலும் மெய்யாலும்

 

யாருக்காக எண்ணம் கொண்டாள்?

மாற்றத்தாலும் மறதியாலும்

Vidhya: ஓவியம் தீட்ட வந்த

 காரிகை இங்கே ஓவியம்

 ஆனாள்!

ஓவியம் மட்டுமே விலைக்கு

காரிகை அல்ல!

 


படமும் கருத்தும் by Winmeengal

 


Shanmugapriya: 

சிறைபிடித்த இதயத்தை

படத்தில் கூட பார்க்க 

விரும்பாத என் புலன்


புத்தரை எழுப்புங்கள் 

உலகெங்கும் போதிமரம் நட!!!!


--பிரியா

Kiruthika: 

பூட்டிய ...

அவளே...

ஒரு நாள் நிச்சயம் திறப்பாள் ...!...

தன் -

தன்னமிக்கையால் ...

சுய எழுச்சியால்...

திறன் கூட்டலால்...

தேடலின் பலனால்...!...


Akhila :

இதயம் 

திறக்கத்தான்...

லேசாகும்...!.


பறக்கும் -

பாரமும்...!..


Vidhya :

சாவியை கையில்

 வைத்துக்கொண்டே சிறையில்

 மாட்டிய அவலம்!

சிறைகளை உள்ளடக்கிய இதயம்

 இங்கே இரும்பு சிறைக்குள்

 மாட்டியது ஏன்?

Tuesday, November 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தோட்டத்து பூக்கள் அத்தனையும் சங்கமம்

ஓர் வண்டியிலே

பாரம் தாங்கும் அதுவும் அழகே

கொய்பவர் எவரோ

விற்பவர் எவரோ

சூடுபவரும் எவரோ

சூடிக் கொள்பவரும் எவரோ

ரசிப்பவரும் எவரோ

மகுழ்பவரும் எவரோ

எதுவும் கண் முன்னே நிழல் கூட காட்டது

எவரின் செயல் எவருக்கும் தெரியாது

புன்னகையை விரும்புவது அல்லாமல்

படமும் கருத்தும் by Veena Shankar

 


 அதிகம் பேசும் நாவினை மட்டும் தைக்க தெரியாத இணை


 இணை பிரியா நண்பர்களின் கூட்டு முயற்சியில் பொலிவு

 பெறும் ஆடைகள் யாவும்


தனித்திருப்பது பிடிக்காது எப்போதும் ஜோடி சேரும் உறவுகள்

வெற்றிலை பாக்கு போலே 


சுடும் வார்த்தைகளுக்கு ஊசியும் 


ஆடையின் தரத்திற்கு நூலும் உவமையானதும் இங்கேயே


கூர் முனை செய்யும் தவறினால் கொண்ட கிழிசலையும் 


அதை கட்டி காத்து அணைத்து மூட நினைக்கும் நூலும்


உள்ளவரை கிழிசல்கள் இல்லை


ஆடையின் கிழிசல்கள் அடைபடுவதும்


தேவையுள்ள இடத்தில் பொத்தானுக்காக

கிழிந்து தைப்பதும்

உண்டு தானே ஆடையின் வடிவத்தில்


தாகம் தீர்க்கும் நீர் போலே அங்கம் மறைக்கும் கூட்டணியின் முயற்சி

உலகில் எவருக்கும் தேவையே

Monday, November 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


இரு கூர்முனைகள் ஓர் காதலை பிரிக்கும் முயற்சியில்

 தேவையின் நிகழ்வு முடிந்தவுடன்

உதறி விடும் மனிதனை

வெட்டி எறியும் பந்தம்

 ஒன்றை துண்டித்துப் பார்

அதன் அர்த்தம் விளங்கும். 

அது 


பகையோ? வருவது பேச்சால் 


நட்போ? மலர்வது உறவால் 


காதலோ? பிறப்பது ஆவலால் 


ஊடலோ? பரிமாற்றத்தின் செயலால்


பிரிவோ? தெளிவாய் பகிரராததால் 


அதிர்ஷ்டமோ? காலம் சிறப்பதால்


ஆவலோ? துண்டானதை இணைப்பதால்


துக்கமோ? கண்ணீர் அறியாததால் 


இன்பமோ? பகைவன் அடையாளமானதால் 


எதுவும் எளிதே இரண்டாக்குவது

கடினமே என்றும் 

கோர்வையாய் இணைப்பது


இணைந்திருப்போம் கத்தரி போலே

மத்தியில் உள்ள

அன்பு எனும் திருகாணி சரியாய் உள்ள வரை

Sunday, November 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


Akhila: புயலும் அவளே.. 

அமைதியும் அவளே! 👧

 Veena Shankar: அழகான முகமும்


அமைதியான கண்களும்


அருவியோ? அலையோயென்ற

ஆக்டோபஸ் கூந்தலும்   


அமிர்தமாக இதழ்களும்


அகலமான இமைகளும்

 

அளவான நாசியும் 


அலங்கார கொண்டையும்

 

அரசியின் மகுடமும்


அகக்கண்கள் பேசவும்


அர்த்தமுள்ள வடிவங்களும்


ஆருயிருக்கு செழிப்பும்


அகங்காரம் கொள்ள

 தூண்டுதே


அதிசயிக்கும் மனமும்

ஓவியம் என்ற கலையில்

Saturday, November 9, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


ஒரு 

பெண்ணின் 

மனதிற்குள்

எப்போதும் -

உண்டு ..

ஓர் ..

தீரா பேராசை ..!..


அவள் -

கனவில் 

அழுதால் கூட 

அது -

அவன் ..

காதில் 

விழ வேண்டும்..!..


அவள் -

மௌனத்தை 

அவன் மட்டும் 

மொழி பெயர்க்க

வேண்டும்..!..


அவள் 

எப்படி 

அவனுக்கு 

உண்மையாக இருக்கிறாளோ...

அதே போல் 

அவனும் 

இருந்திட வேண்டும்..!..


வேண்டுவன எல்லாம்

கிடைக்கா விட்டாலும்...

பரவாயில்லை .!..


வேண்டாதவை மட்டும்

கிடைக்காமலே

போகட்டும்!..


இதுவே 

அவள் -

மன விருப்பம்...!!!...

- Kiruthika 


Veena Shankar: முற்போக்கானவள் என்றும் அவள்


முயற்சியை மேற்கொள்பவள் அவள்


முதிர்ச்சியால் வெல்லுபவள் அவள்


முதுகெலும்பு வீட்டில் அவள்


முடியாது என்றுரைக்காதவள் அவள் 


முடிவை நோக்கி பயணிப்பவள் அவள்


முட்டுக்கட்டையை தகர்ப்பவள் அவள்


முண்டாசுக்கவியின் வழி அவள்


முத்திரை பதிப்பவள் அவள்


முகத்திரை தவிர்ப்பவள் அவள்


முடிவில்லா பாதை அவள்


முழுமையும் கொண்டவள் அவள்


முதுமொழி ஏற்பவள் அவள்


முத்தாய்ப்பாய் இருப்பவள் அவள்


முற்றிலும் உண்மை இது


முயன்று பாருங்கள் அவள் வழியில்


Shanmugapriya: வெள்ளை நிறம் ஆன்மீக பற்றையும்


சிகப்பு நிறம் அவளின் சக்தியையும் 


நீல நிறம் அவளின் லட்சியத்தையும்


பச்சை நிறம் அவளின் அமைதியையும்


இளஞ்சிவப்பு அவளின் அன்பையும்


என்னத்துக்கு ஏற்றது போல்


முகத்தில் மின்னிக் கொண்டிருந்தது


 அவள் ஒரு முக்கோண பட்டகம்


---பிரியா


ஓவியம் வரைய காகிதம்

 இல்லையோ!

அவளே ஒரு ஓவியம்

அவளையை யார் சிலையாக்கி

சிறைப்பிடித்தது !

மாய வண்ணங்கள் தாங்கிய

 முகத்தில் கண்ணங்கள்

 சிவக்கலாம்,முகம் மலருமா!

வெட்கத்தில் குனியும் தலை

 இங்கே மனவேதனையில்

 குனிந்தது ஏன்?

காட்சிப் பொருள் இல்லை அவள்!

 பார்த்தவுடன்

 தோற்றத்தில்,சொல்லில் ஈர்க்கும்

 காந்தம் அவள்!

- வித்யா


படமும் கருத்தும் by Veena Shankar

 


உழைப்பின் வெற்றி முயற்சியில் என்றாலும் 

அதன் ரகசியம் உண்மையில் 

அதனை அடைய எதிர்வரும் இடர்களை தாங்குவதிலே


இரு கரங்கள் காணா வேளையில்

இரு கால்கள் உதவும்

பாரத்தை எளிதாக பற்றி தாங்க


தன் புற்றை அடைத்து

விடும் என்ற அச்சத்தில்

தன் குடும்பத்தை காக்க வேண்டி

ஒற்றைக் கல்லை 

ஒற்றை பூச்சியாய் இருந்து தாங்கும் எறும்பின் முயற்சி

அழகே!

அறிவே!

சிறப்பே!


குடும்ப பொருளாதாரத்தை பெருக்க சுமக்கிறான் பொதியை

பிள்ளைகளை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்கிறான் 

பாவம் அவன் பொருளாதாரமே அடகு போகிறது

பிள்ளைகளின் கல்விக்காக

Thursday, November 7, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


 பார்த்தவுடனே உள்ளும் புறமும் புன்னகைப்பூத்த படம்,யாரின் கற்பனையோ தெரியவில்லை! அற்புதம்..

பல போரட்டாத்தின் முன்,நாம் என்ற எண்ணத்தில், கண்கள் கலக்க,மனம் புன்னகைப்பூக்க உருவான நம்பிக்கை,வாழ்வின் மகிழ்ச்சி!

இணைந்த கரங்கள்,இணைந்த மனம் இவற்றின் கூட்டணியில் பூத்த புன்னகை!

அள்ள அள்ள குறையா அன்பு!

போர்க்களத்தில் பூக்கும் அன்பு!

பிரிவின் வலி இங்கே மெழுகாக உருக அதன் வெளிச்சத்தில் உதித்த சூரியன்!

இது போதுமே ! இந்த துணை வேண்டுமே! இவ்வுலகை,எவ்வுலகையும் வெல்ல!

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கரையும் உடல்களின் ஊடே

உருகும் தோழமை 

சிரத்தில் உஷ்ணம் என்றாலும்

கரத்தில் அணைப்பு

சிறந்து விளங்கும் வாழ்க்கையில்

மறந்து போன பழமை

தளர்ந்த கால்களுக்கிடையே

மீண்டும் 

வளர்ந்த நட்பு


 வணங்காமுடிகள் இங்கே

 நாவில் மட்டும் புன்னகை

வார்த்தைகளில் இனிமை


 உருகியது நீயும் நானும் என்றாலும்

தழைத்தது நம் குடும்பம்

பிறர் மனதை கவர அரசனாக வேண்டாம்

அசுரனாக வேண்டாம்

சுடராய் இருந்தால் போதும்

வலிமையுள்ள தீயாய் அல்லாமல் 

 தீபமாய் மாற வாழ்வு

நம் வசம்


உருகி பேசுவதில் யாரும் சளைத்தவரல்ல 

உதிரம் தேய கொண்ட உழைப்பில்

உறுதியோடு இறுதி வரை

கொள்ளும் நட்பே சிறப்பு


 ஏற்றிய சுடர் ஒளி கொடுத்தாலும்

தன் உயரத்தை குறைத்துக் கொண்டாலும்

களம் காணவே விரும்புகிறது

காற்றின் வேகத்தில்

தன் அழிவைக் கூட

எண்ணாமல்

சுடராக மாறி பிறருக்கு

ஒளி கொடுப்பதும் சிறப்பே

எனினும் அதன் சிறு வடிவம் மட்டுமே அழகு

பெருந்தீயாய் மாறி உடமையை அழிக்காமல் உள்ளவரை


 தலைமை யாருக்கென மோதிக் கொண்டாலும் 

அடுத்தவருக்கு வாழ்த்து சொல்லி 

போட்டியாளர் ஒருவரை ஒருவர் தழுவும் தருணம், 

வெற்றி யாருக்கென்றாலும் இது சொல்லும் அவர்களின் பண்பை


 உருகும் மெழுகிடம் உள்ள பண்பு

மனிதனிடம் காண முடியவில்லையே!

அப்படிப்பட்ட மனிதன் உருவாக்கிய பொருளில் மனிதநேயம் எதிர்பார்ப்பது சரியோ?

தன்னால் முடியாததை தான் தயாரித்த பொருளில்

தியாகத்தை புகுத்தினான்.

இதுவும் விந்தையே!

உயிர்த்தியாகம் செய்த மெழுகும்

தான் உதிர்த்த மெழுகு நீரில்

சில மணித்துளிகள்

உயிர் கொள்வது போல

மனிதரில் சிலரும் உண்டு

என்பதும் நிஜமே!

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...