இன்றைய சிந்தனை (3)
1) தேவையில்லாதது மனதில் தங்கி விட்டால் தேவையுள்ளது தங்க வாய்ப்பற்று போகும்
2) பொறுப்பற்ற வாழ்க்கையும் துறக்கும் விலை மதிப்பற்ற மனிதத்தை
3) இருப்பதும், இருப்பதில் கிடைப்பதும், கிடைப்பதில் மகிழ்வதும், மகிழ்வதில் பகிர்வதும் , பகிர்வதில் சிறப்பதும், சிறந்து அதில் வாழ்வதும் கொடையே!
4) மணம் தரும் உதிர்ந்த பூக்கள் கூட திரவியம் தரும் போது நிலையில்லா நம் மனமும் ஓர் நாள் பக்குவப்படும்
5) ஒருவரை ஒருவர் ஏற்றி விடும் மனது இருந்தால் போதுமானது. தாங்கி பிடித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை
6) நம் உறவுகளுக்குள் பந்தம் தொடர எண்ணினால் மறதியும் தொடரும் என்பதே உண்மை
7) பாரத்தை சுமப்பது மட்டுமே கடினமல்ல , பிறர் நம்மீது கூறும் ஆதாரமற்ற குற்றத்தையும் தாங்குவது கடினமே!
8) ஒருவருக்கான மதியும் மதிப்பும் அனுமதி கேட்டு வருவதில்லை.
9) வயது என்பது ஒரு எண் மட்டுமே, எப்போதும் ஒருவனின் அனுபவமே அவன் உண்மையான வயது.
10) சொப்பனம் கூட கசக்கிறது வாழ்க்கையில், அது நமக்கு எதிராக இருக்கும் போது மட்டும்
11) மனதில் தூக்கம் , செயலில் தேக்கம்,
12) தேடலின் ஆரம்பம் எது என தேடியதில் உணர்ந்தேன் தேடலுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்று
13) வென்றவன் பேச்சில் மகிழ்ச்சி தெரியும். தோற்றவன் பேச்சில் அவன் அடுத்து அடையப் போகும் வெற்றி புலப்படும்
14) நாம் நினைப்பது நடந்தால் நம்மை மீறிய சக்திக்கு மதிப்பு இல்லை
15) தெளிவான சிந்தனை மட்டுமே தெளிவான பாதையை காட்டும். தெளிவான பாதை மட்டுமே தெளிவான வாழ்க்கையை கொடுக்கும்
16) அழகை ஆராதிப்பதிலும் ஓர் அளவு உண்டு, அது வார்த்தையால் எல்லை மீறாத வரை. வார்த்தைக்கும் ஓர் அளவு உண்டு, அது அடுத்தவர் கோபம் கொள்ளாத வரை.
17) பிறப்பின் முடிவு மடிவதில் இல்லை. வெற்றியின் முடிவு நம்மிடம் இல்லை புகழின் முடிவு அடைவதில் இல்லை ஆனால் நம்பிக்கையின் முடிவு முயற்சியில் மட்டுமே உண்டு.
18) உணர்வின் வெளிப்பாட்டில் வருவதே நம் ஆசையும் தேவையும்
19) நாம் முதல் எட்டு வைக்கும் போது நம்மை எட்டி விட்டவர்கள் யாவரும் நம்மை எட்ட நின்று காண்பர் பின்னாளில் நம் வளர்ச்சியின் பலனாய்
20) தனிமை தான் வலிக்கான மருந்து என்று தெரிந்த போதும் அதன் வழி வலி குறையவில்லை என்றால் அடுத்து என்ன செய்யக் கூடும் என்பதை தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சிறந்தது
21) ஏணியின் வேலை ஏற்றி விடுவது மட்டுமே, அதுவும் கர்வம் கொண்டு ஏற்றி விட மறுத்தால் நம் நிலை சமதளமே!
22) பொய்யில் உள்ள உண்மையும் கோபத்தில் வரும் பொறுமையும் என்றும் சிறந்தது
23) நம் எண்ணங்களுக்கு ஓர் முடிவு இல்லாதவரை வாழ்க்கையும் நம்மை ஏமாற்ற தான் செய்யும்
24) உறவு என்னும் பூவை மாலையாக தொடுப்பதும் , தொடுத்த மாலையை பூக்களாக உதிர்ப்பதும் நாம் அனுசரித்து போவதிலே!
25) அடுத்த மனிதனின் குணத்தை அறிந்து கொள்ள நினைப்பதை விட, நாம் அவனுக்கு நம் குணம் அறியும் படி வாழ்வோம்
26) ஒரு பொருளின் நுட்பம் அறிய கேள்வி சிறந்தது. அதைவிட அதனின்று, பல கோணங்களில் அறியப்படும் பதிலும் சிறந்தது.
27) விரக்தி வந்த பின்னும் வாழ்வில் விடியலும் வருமே! மனம் என்னும் கோட்டையில் இருப்பதும் விலகுவதும் தேவையே! எதுவும் எளிதில் கிடைத்து விட்டால் தெய்வம் கூட மனதில் தங்காது
28) குறை காணும் மனது இறுதி வரை திருப்தி கொள்ளாது. அடுத்தவரின் தேவையையும் தம்மை தாமே பூர்த்தி செய்து கொள்ள விடாது
29) உடைபடாமல் இருக்கும் வரை நீர்குமிழியும் மனித உறவும் ஒன்றே
30) விவாதங்கள் தொடர, யார் மீது குற்றம் உள்ளது என்பதை ஆராய்வதை விட அடுத்து அது நிகழாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் சிறந்தது.
31) பொறுமையில் சிறுமை கொண்டால் பெருமையிலும் வறுமை வரும்
32) ஒருவர் நம்மை விட்டு விலகுவதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அந்த ஒருவர் நம்மை நெருங்குவதற்கு அன்பு என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
33) வீட்டில் ஒருவர் துக்கப்பட்டாலும் அழத் தெரிந்தவள் பெண். பிறர் இன்பத்தின் போது மகிழத் தெரிந்தவள், அவள் தன் துக்கத்தை மறந்து
34) காலடிகள் கூட பசுமையாகும் உன் பார்வையையும் பாதையையும் சரியாக தேர்ந்தெடுத்தால்
35) மற்றவர் நம்மை புரிந்து கொண்டு சண்டையிடுவதை விட அவர்களுக்கு நாம் புரியாத புதிராகவே இருந்து விடலாம்
36) சோகத்தில் வந்தாலும் மகிழ்ச்சியில் வந்தாலும் கண்ணீர் கரிக்கத் தான் செய்யும், அதற்காக நாம் துக்கத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. அது போல தான் திருமண பந்தமும், சில நேரம் சிறப்பாய் அமையும். சில நேரம் வெறுப்பாய் இருக்கும். அதை சரியாய் புரிந்து கொண்டு கடப்பதே சிறந்தது.
37) நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓர் கதை இருக்கும். அதை மறப்பதும் கதையை தொடருவதும் எழுத்தாளரான நம் கையிலே
38) சில நேரங்களில் உண்மை சொல்வது கூட பாதகமாக அமையும், என்றாலும் மனதில் உறுத்தல் இல்லாமல் உயர்ந்து விடுவோம்.
39) பிறருக்காக உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டே இருந்தால் உங்கள் கருத்தில் எப்போதும் ஒர் நிலைப்பாடு இருக்காது
40) கூட்டுக் குடும்பம் சிதைந்ததால் விலகியது உறவுகள் மட்டுமல்ல உணவுகளும் உணர்வுகளும் தான்
41) தேடும் யாவும் கிடைப்பதில்லை தேடிய யாவும் நிலைப்பதில்லை தேடாதவை என்றும் தானே அமைவதில்லை
42) நம்மிடம் ஒன்றுமில்லை என்று நினைப்பதை விட, ஏதோ ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கடப்பதே சிறப்பு
43) மனதிலும் உடலிலும் துணிவும் பணிவும் கொண்டால் செய்யும் பணி சிறக்கும்.
44) தேவை என்ற தேடலிலேயே மனிதனின் பயணம் தொடர்கிறது நித்தமும். எல்லையில்லா தேடலுக்கு முற்றுப்புள்ளி வைப்பவனும் படைத்த அவன் ஒருவனே!
45) கண்ணாடியில் தெரியும் பிம்பம் அல்ல வாழ்க்கை நீ சிரித்தால் சிரிக்க, நீ அழுதால் அழ. அது கண்ணாடி போன்றது, கவனமற்று கையாண்டால் உடைந்து விடும்.
46) நீ விருப்பப்பட்டு செய்யும் செயல் உன்னை முன்னேற்றும், கடமைக்காக நீ செய்யும் செயல் உன்னை சார்ந்தவரை பின்னேற்றும்.
47) எதிர்பார்ப்பதில் ஏமாற்றம் இருப்பது போல ஏமாற்றமும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்க மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்
48) பல கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே நம் காலமும் வலிமையும் தேய்கிறது
49) எந்த உறவுகளையும் குறையில்லாமல் தொடருவது என்பது பெருங்கலையே.
50) இல்லம் , கண்ணாமூச்சி ஆடும் இடமல்ல, அங்கே ஒளிவு மறைவோடு வாழ்வதற்கு