Thursday, November 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 இதயத்தை பிளவுபடுத்த கூர்மையான

கத்தி தேவையில்லை

அழகான மலரும் இதயத்தை

பலவீனப்படுத்தும்


 இதயத்தை குத்தி விட்டு

மலர் கொண்டு அஞ்சலி 

செலுத்தும் உலகம் இது


மலரின் மென்மைக்காக குத்துப்பட்டாலும்

இதயம் ரணமாவதும் புதிதல்ல இங்கே


முதல் முறை கத்தியால் குத்திய

பின் ரணமாக்கும் இதயத்தை

எவ்வளவு முறை குத்தினாலும்

மீண்டும் மீண்டும் வலி 

நீளுவது போல

மலருக்காக காத்திருப்பேன் என்றே

சொல்லுவான் காதலன்

அவன் தியகத்திற்காக இறுதியில்

கிடைப்பதும் மலரே

ஆனால் தலையில் சூட்டிக் கொண்டு

கொண்டாட அல்ல

உடலில் மாலையாய்

அவன் உயிர் அஞ்சலிக்காக


 கண்ணில் தெரிவது மலராயினும்

முட்களும் உண்டு

அதனுள்ளே

கத்தி போல் உயிரை மாய்க்க

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...