இதயத்தை பிளவுபடுத்த கூர்மையான
கத்தி தேவையில்லை
அழகான மலரும் இதயத்தை
பலவீனப்படுத்தும்
இதயத்தை குத்தி விட்டு
மலர் கொண்டு அஞ்சலி
செலுத்தும் உலகம் இது
மலரின் மென்மைக்காக குத்துப்பட்டாலும்
இதயம் ரணமாவதும் புதிதல்ல இங்கே
முதல் முறை கத்தியால் குத்திய
பின் ரணமாக்கும் இதயத்தை
எவ்வளவு முறை குத்தினாலும்
மீண்டும் மீண்டும் வலி
நீளுவது போல
மலருக்காக காத்திருப்பேன் என்றே
சொல்லுவான் காதலன்
அவன் தியகத்திற்காக இறுதியில்
கிடைப்பதும் மலரே
ஆனால் தலையில் சூட்டிக் கொண்டு
கொண்டாட அல்ல
உடலில் மாலையாய்
அவன் உயிர் அஞ்சலிக்காக
கண்ணில் தெரிவது மலராயினும்
முட்களும் உண்டு
அதனுள்ளே
கத்தி போல் உயிரை மாய்க்க

No comments:
Post a Comment