இரு கூர்முனைகள் ஓர் காதலை பிரிக்கும் முயற்சியில்
தேவையின் நிகழ்வு முடிந்தவுடன்
உதறி விடும் மனிதனை
வெட்டி எறியும் பந்தம்
ஒன்றை துண்டித்துப் பார்
அதன் அர்த்தம் விளங்கும்.
அது
பகையோ? வருவது பேச்சால்
நட்போ? மலர்வது உறவால்
காதலோ? பிறப்பது ஆவலால்
ஊடலோ? பரிமாற்றத்தின் செயலால்
பிரிவோ? தெளிவாய் பகிரராததால்
அதிர்ஷ்டமோ? காலம் சிறப்பதால்
ஆவலோ? துண்டானதை இணைப்பதால்
துக்கமோ? கண்ணீர் அறியாததால்
இன்பமோ? பகைவன் அடையாளமானதால்
எதுவும் எளிதே இரண்டாக்குவது
கடினமே என்றும்
கோர்வையாய் இணைப்பது
இணைந்திருப்போம் கத்தரி போலே
மத்தியில் உள்ள
அன்பு எனும் திருகாணி சரியாய் உள்ள வரை

No comments:
Post a Comment