இன்றைய சிந்தனை (2)
1) தேவையுள்ள இடத்தில் நீ வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாய் கூட இருக்கலாம். ஆனால் உன் அவசியம் அந்நியமாக்கப்படும் இடத்தில் வான் நீராய் கூட இருக்காதே.
2) வலிகளும் நம் உள்ளத்தை மறுத்து போக செய்யும்.அதனை புறந்தள்ளி கொள்ளும் வெற்றி மட்டுமே நம் வாழ்வை நிலைநிறுத்த செய்யும்
3) பிரிந்து போன நட்பை உயிர்ப்பிக்கும் முன் பிரிவின் காரணம் தெரிந்து கொள்ள முனைவது வீண் செயல்
4) தீபம் எரிவதும் அணைவதும் காற்றினாலே! நம் வாழ்வின் பலன்களும் நம் வார்த்தையாலே!
5) மலரிடம் சிநேகம் கொள். அதன் மலர்ச்சி உன்னை புன்னகைக்க வைக்கும் எந்நாளும்
6) அடுத்தவருக்கு நீ கடவுளாக தெரிய வேண்டிய அவசியமில்லை, அவருக்கு நீ மனிதனாக மட்டும் இருந்தால் போதும்
7) வினாக்கள் பலவற்றிற்கு மௌனம் பதில் என்றால் வினாவும் மௌனமாகி போகும் அங்கே
8) இருப்பதை விடுப்பதும் இல்லாததை தேடுவதும் தான் வாழ்க்கை. இதில் தொலைப்பதும் துறப்பதும் அவரவர் மனதை பொறுத்து
9) எதுவும் எளிதாய் கிடைத்தால் கிடைத்ததில் மகிழ்ச்சி என்பது சொற்பமே. வடுவோடு கூடிய வெற்றியே மனதில் என்றும் நிலைக்கும்.
10) புன்னகை ஒன்று போதுமே, மனதில் பொதிந்துள்ள துக்கம் திசை மாற
11) எந்த நாளும் உழைப்பவருக்கு சொந்தமே! கோஷப் போற்றுதல் இல்லையென்றால் உழைப்பும் போற்றப்படும் ஆங்கே
12) ஒரு காயத்தின் வலியை உணர்ந்த பின் மீண்டும் அந்த செயலை செய்து வெற்றி கொள்வதோ அதை விடுப்பதோ நம் மனம் பொறுத்து
13) யாரும் வருவார் யாரும் போவார் நம் வாழ்க்கை பயணத்தில் அதில் வெகு சிலரே உடன் பயணிப்பர்
14) ஒருவர் வலிய ஏற்ற செயலின் வலிமையாவது யாதெனில் அவர் தன் பொறுப்பு அறிந்து செயல்படுவதே
15) பேசுவதை குறைத்து கொள்வதால் மட்டுமே மதிப்பு உயராது. அடுத்தவரின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து உயர வேண்டும்
16) ஆறுதல் தரும் பேச்சும் விலகி நிற்கும் சில நேரங்களில் அனாவசிய புலம்பல்களால்
17) அன்பு காட்டும் உள்ளங்களில் சிறை பறவையாக கூட வாழ்ந்து விடலாம். ஆனால் குழப்பாமான நெஞ்சங்களில் பருந்தாக கூட இருக்க முடியாது
18) உன்னை பற்றி பிறர் தவறாக விமர்சித்தாலும் அவர்கள் பார்வை போலவே நீயும் இருந்து விடு. அவர்களாவது அதில் மகிழ்ச்சியடையட்டும்.
19) வாழ்க்கையில் விரோதிகளையும் மதியுங்கள், அவர்களே உங்கள் வளமான பாதைக்கு உரமிட்டவர்கள்
20) அறியாமையின் வெளிப்பாடு கோபமாகவும் இருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம். முன்னது மதியை குறைக்கும், பின்னது இருளை நீக்கும்
21) கலங்கிய மனதில் உதிக்கும் எண்ணமானது தெளிவில்லாத நீரோடையில் முகத்தை பார்ப்பதற்கு சமம்
22) தேடுதலின் பலன் சிறியதோ பெரியதோ, அதனின்று பிறக்கும் திருப்தி பெரியது
23) ஒருவர் மற்றொருவரிடம் அடங்கி போவதும் இயலாமையால் அல்ல, அடக்குபவரின் ஆளுமை இழந்து போகாமலிருக்கவே !
24) எதிலும் திருப்தியடையா மனம் காணும் அடுத்தவரின் குறை மட்டுமே
25) எல்லை மீறா வார்த்தை சொல்லும் உறவிற்கு எல்லை இல்லை என்று
26) அகண்ட பார்வை இருண்ட வாழ்வை அகற்றும்
27) எல்லோரிடமும் ஓர் சோகம் ஒளிந்துள்ளது. அதை அடக்கி ஆழ்வதும் வெளிப்படுத்துவதும் அவரவரின் விருப்பத்தை பொறுத்து
28) எதையும் தாங்கும் இதயமும் வருந்தும் தன்னுடலின் அங்கம் விமர்சிக்கப்பட்டால்
29) உன் நீண்ட பயணத்திலும் எல்லைகள் உண்டு, அந்த எல்லையும் ஆரம்பம் ஆகும் மற்றவர்களுக்கு
30) கறை கொண்ட உள்ளம் கரை காணாது , மனம் கொண்ட இடத்தில் மணம் அகலாது
31) தேவை என்பதை நீ ஆட்கொண்ட பின், நீ காண்பது யாவும் உன் தேவையே!
32) பிறருக்கு அள்ளிக் கொடுத்து கிள்ளிப் பெறுவது இன்பம்
33) தன் கேள்விக்கு விடை தெரியாதவன், பல சமயங்களில் அடுத்தவருக்கு விடையாக தெரிவதும் உண்டு
34) இன்பத்தில் கொள்ளும் துன்பத்தை விட துன்பத்தில் பிறக்கும் இன்பம் சிறப்பு!
35) நிலைத்த வாழ்வு நிலைக்க சுவை கூட்ட வேண்டும் நகைப்பு என்னும் செயலாலே!
36) கண்ணில் காண முடியாத ஒருவரை நம் அகத்துள் உணர்வதே சிறப்பு
37) எதை பெறுகிறோம் என்பதை விட எதை இழக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வது வாழ்விற்கு சிறப்பு
38) வாய்ப்பு பல முறை நம் வாசல் படி வரை வந்தாலும் மனம் என்னும் கதவு திறந்தால் மட்டுமே வெற்றி கிட்டும்
39) நாட்கள் செல்ல செல்ல நம்மை புண்படுத்தியவரை கூட மன்னித்தும் நினைவிலிருந்து அகற்றியும் விடுகிறது நம் மனம்
40) இழப்பும் வெற்றிக்கு படி தான். ஆனால் மீண்டும் படியில் ஏறும் போது பிடி தளராமல் இருக்க வேண்டும் வெற்றிக் கனியை இனிதாய் ருசிக்க
41) வலிகள் மட்டுமே துணையான உள்ளத்தில் மொழிகள் மௌனமே!
42) நம் சோகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்தாலும் அதற்கு மறுபேச்சு சொல்லாதவன் கண்ணாடி ஒருவனே!
43) மருந்தும் சிறந்தது அது தேவைப்படும் போது மட்டுமே ; அது போலத்தான் உறவுகளும் நட்புகளும் சிலர் கண்ணோட்டத்தில்
44) தங்கள் சுய அடையாளத்தை தொலைத்தவர்களுக்கு ஆதார் கார்டும் தேவை தானா?
45) நாம் அறிவாய் செயல்பட்டும் தோற்றுப் போகிறோம் என்றால் இன்னும் கூடுதல் முயற்சி தேவை என்பதே உண்மை
46) எதுவும் கடந்து போகும் என்றாலும் கடந்த வந்த பாதையும் அனுபவமே
47) கல்லானது தானும் கரையாது,அடுத்தவராலும் கரையாது. அதுபோலத்தான் நம்மில் ஒளிந்திருக்கும் பொறாமை குணமும்., நம்மையும் வாழ விடாது, அடுத்தவரையும் வாழ விடாது.
48) இன்று ஒன்றாக கூடி மகிழ்வது மட்டுமே நட்பல்ல , பின்னாளில் துக்கத்திலும் நிலையாக நிற்பதே நட்பு.
49) அனுபவமும் ஓர் வெகுமதியே, அடுத்தவர் இலவசமாக கொடுப்பதால்
50) அதீத பேச்ச்சினாலும் அதனின்று வெளிவரும் எதிர்மறை விமர்சனத்திற்கு பின் வரும் அடக்கமான வார்த்தைகளும் நம் அனுபவத்தின் வெளிப்பாடே!

No comments:
Post a Comment