Thursday, November 28, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


சில சமயங்களில்...

 உன்னுடனேயே

இருந்தால்...

நேரம் ஓடி போகிறது...!..


நீ இல்லாது போனால் 

நேரம் நகர கூட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது...!..


ஏனென்றால்..

கேட்காத செவிகளை காட்டிலும்...

கேட்கும் செவிகளை 

காட்டி கொடுத்து .. 

நல்தகவலை சுமந்து கொண்டு...

தூது செல்லும் 

நீ

துணையாக 

மாறிப்போனாய் ...!..


அளவாக 

இருந்தால் 

நீ

எமக்கு 

வைட்டமின் ...!..

அளவுக்கு ..

மீறிப்போனால் 

நீயே

வியாதி...

கண்ணுக்கும்...

மனசுக்கும்...

மூளைக்கும்...!...


இரு...

கொஞ்சம் -

கொஞ்ச

நேரம் 

தூர இரு...!..


அப்போது தான் ..

பக்கம் வர ...

முயற்சியாவது

செய்யும்

உடன் இருப்புகள்...

உறவுகள்...!!!...

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...