நிலத்தில் வாழ்ந்து அனுபவித்த பிறகு
நிலவில் பறக்க ஆசையே
பெண்ணின் மனதில் சிறுமையில்லை
தனக்கென்று ஒரு வாழ்வு அமையாத வரை
கடக்கும் பாதை தொலைவில்லை
யாவும் அண்மையில் கிட்டும் வரை
தொலைத்த நாட்கள் திரும்புவதில்லை
என்றும் அவை நினைவுகள் என்று
அறியும் வரை
தேவை யாதும் தீர்ந்த பின்னே
பறப்பேன் நானும் தீர்க்கமாய்
ஓர்நாள்
நீல வானம் நீள்கையில் கூட
நினைத்தே செல்வேன்
வானிலும் ஆராய பல
உண்டு என்று
அதில் வெற்றி கொள்வேன் விரைவில்
பூமியில் மானிடனின்
மனம் இதுவென்று
அறியா போது
வானத்தில் கிடைக்கும் வெற்றி
அற்பமே!
அண்டத்தில் சிறந்தது
எதுவோ?
அறிய முற்பட மனமும்
சொன்னது
எல்லாவற்றிலும் வெற்றி தேடாதே
உன் அமைதியை
தொலைப்பாய் என்று

No comments:
Post a Comment