Friday, November 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நிலத்தில் வாழ்ந்து அனுபவித்த பிறகு

நிலவில் பறக்க ஆசையே


 பெண்ணின் மனதில் சிறுமையில்லை 

தனக்கென்று ஒரு வாழ்வு அமையாத வரை

கடக்கும் பாதை தொலைவில்லை

யாவும் அண்மையில் கிட்டும் வரை

தொலைத்த நாட்கள் திரும்புவதில்லை

என்றும் அவை நினைவுகள் என்று

அறியும் வரை


 தேவை யாதும் தீர்ந்த பின்னே

பறப்பேன் நானும் தீர்க்கமாய்

ஓர்நாள்

நீல வானம் நீள்கையில் கூட

நினைத்தே செல்வேன்

வானிலும் ஆராய பல

உண்டு என்று

அதில் வெற்றி கொள்வேன் விரைவில்

பூமியில் மானிடனின் 

மனம் இதுவென்று

அறியா போது 

வானத்தில் கிடைக்கும் வெற்றி

அற்பமே!

அண்டத்தில் சிறந்தது

எதுவோ?

அறிய முற்பட மனமும்

சொன்னது

எல்லாவற்றிலும் வெற்றி தேடாதே

உன் அமைதியை

 தொலைப்பாய் என்று

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...