கைக்குட்டை போல் உள்ளங்கையில் அடங்கி
எங்களின் உயிர் மூச்சானாய்
சிறு குழந்தை போல் உன்னை பற்றிக் கொள்ள எங்களை
பழக்கப்படுத்தினாய்
காதலே கசந்தாலும் எங்கள் வாழ்வில் நீ விருட்சமானாய்
விரும்பும் இடம் செல்ல நீயும் துணையானாய்
காணும் காட்சியை படமாக்கி அதை அடுத்தவரின் பார்வைக்கு சொந்தமானாய்
உன்னை நாங்கள் பிரியாமல் இருக்க அவ்வப்போது உனக்கு நீயே உயிர் கொடுத்து கொண்டாய்
தோப்பாய் இருந்த எங்கள் குடும்பத்தை தனி மரமாக்கினாய்
இதுவே உன் சாதனை
முன் சந்ததியினர் சொல்வர் இது வேதனை என்று

No comments:
Post a Comment