Friday, April 26, 2024

நீளும் நீலம் by Vidhya Nivash


 எத்தனை முறை பார்த்தாலும் முதன்முறை பார்த்தது போல் சிறுப்பிள்ளையாகி மயங்கி நின்றேன்.எது வானம்,எது கடல் என்று தெரியாமல் குழம்பி நிற்க.இடையே சிறு மணற்பரப்பு கோடுப் போட்டு காட்டியது நான் இருக்கேன்ல என.நீல நிறத்திலே எத்தனை விதம்.வானம் கடலிடம் இருந்து நிறம் வாங்கியதா இல்லை அதன் பிரதிபலிப்பை காட்டும் கடல் கண்ணாடியா! இவர்களுக்கு யார் வந்து வண்ணம் தீட்டி சென்றது.உச்சி வெயிலில் உள்ளம் குளிர கண்ட அற்புத நீலப்புரட்சி..

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...