மழைக்கும் வெயிலுக்கும் கொண்டாலும் இட்ட வடகத்தை காக்கவும் செய்வான் காகத்திடமிருந்து
சுடும் வெயிலுக்கு குளிர் கொடுக்க தாங்கினானோ?
மழையின் தாக்கத்தை கட்டுபடுத்த விரித்தானோ?
மற்றவரிடம் தப்பித்துக் கொள்ள உனை ஏந்தினானோ?
பெண் தர மறுத்த நேரத்தில் உனை கொண்டு யாத்திரைக்கு கிளம்பினானோ?
மிடுக்காய் வலம் வர பெண்களும் விரும்பினரோ?
உன் எழில் வண்ணத்தில் அனைவரும் அடி பணிந்தாரோ?
அவசரத்தில் சில நேரம் திறக்காமல் போக்கு காட்டினாலும் உன் தேவை வேண்டும் இங்கே

No comments:
Post a Comment