தன்னை பயன்படுத்துவோருக்காக தன் கருத்த உடலை கரியாக்கி கொண்டவன்
தன் பின்னால் இருப்பவர் முன்னேற தன் அலகை அழகாய் ஒடித்து கொள்ள முயன்றவன் அதில் வெற்றியும் கண்டான்.
தியாகம் பேசப்படாவிட்டாலும் அதை செய்பவனுக்கு உள்ளூர பெருமையே! மகிழ்ச்சியே!
தன்னிலையில் இருந்தால் வரையலாம் சித்திரம்
நிலையிழந்தால் சீவி கரைத்த பொருளில் கொள்ளலாம் ஓவியக்கலை
எதுவும் உண்டு நம் கையில்
படைப்பாளியின் சிந்தனையில்
பயன்படும் முன்பே கொண்ட மரணம், உபயோகிப்பவரிடம் கையாளும் திறமை இல்லாததால், நடந்த சோகம்

No comments:
Post a Comment