Thursday, December 28, 2023

தூரிகையும் தாரகையும் by Veena Shankar

 


தூரிகையும் துயிலாத தாரகையும்


 தூரிகை துயில் கொண்டால் சித்திரம் இல்லை

தாரகை துயில் கொண்டால் சரித்திரம் இல்லை

 சித்திரத்தை கைப்பற்றியது யார்?

வாழ்க்கை வழியில் பயணிக்கும் போது வலியில்லாமல் கடக்க முடியாது


தேவைப்படும் நேரத்தில் மருந்தும் ஆங்கே கொடுக்கப்படும் வாழ்க்கை துணையால்

ஆசை எதன் மீது?

 சித்திரத்தின் மீதா?

சித்திரத்தை வரைபவர் மீது?


துயில்வது யார்?

ஆசைக் கணவனா?

தூரிகையா?

 மனதை தேற்றும் வகையில் ஒன்று நித்திரையாய்

மற்றொன்று சித்திரமாய்

தரமில்லாத எதுவும் நீடிப்பதில்லை அதன் பயணத்தில்

தூரிகை ஏந்திய காரிகை தன் ஓவியத்தின் கவனத்தை துறந்தாள் துணையின் உறக்கம் கலையாமல் காக்க

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...