தூரிகையும் துயிலாத தாரகையும்
தூரிகை துயில் கொண்டால் சித்திரம் இல்லை
தாரகை துயில் கொண்டால் சரித்திரம் இல்லை
சித்திரத்தை கைப்பற்றியது யார்?
வாழ்க்கை வழியில் பயணிக்கும் போது வலியில்லாமல் கடக்க முடியாது
தேவைப்படும் நேரத்தில் மருந்தும் ஆங்கே கொடுக்கப்படும் வாழ்க்கை துணையால்
ஆசை எதன் மீது?
சித்திரத்தின் மீதா?
சித்திரத்தை வரைபவர் மீது?
துயில்வது யார்?
ஆசைக் கணவனா?
தூரிகையா?
மனதை தேற்றும் வகையில் ஒன்று நித்திரையாய்
மற்றொன்று சித்திரமாய்
தரமில்லாத எதுவும் நீடிப்பதில்லை அதன் பயணத்தில்
தூரிகை ஏந்திய காரிகை தன் ஓவியத்தின் கவனத்தை துறந்தாள் துணையின் உறக்கம் கலையாமல் காக்க

No comments:
Post a Comment