ஓடும் போதும்
விளையாடும் போதும்
ஆடும் போதும் பாடும் போதும்
கடும் சொற்களால் நான் கடிந்த
போதும்
அதை
வடுவாய் நினைக்காமல்
நீங்கள் மகிழ
கூடும் போதும்
நான் உங்களை தெரிந்தே
சாடும் போதும்
இடையே
கேடு கொள்ளும் என்
உடலால்,
மனதால் நான்
வாடும் போதும்
தேடும் என் கண்கள்
விடுமுறையில் கூட
என் குழந்தைகளே!
நான் பெறாவிட்டாலும்
ஆசிரியையாய் நான்
பெற்ற பேறு இதுவே.

No comments:
Post a Comment