அருகிலுள்ள விளக்கும்
வானத்தின் நிலவும்
புரிதலாய் இருக்கும் வேளையில்
தன் அறியாமையால் தொலைத்து
விட்ட
வாழ்வை
எதிர்த்து போராட
வழியும் தேவை
வெளிச்சமும் தேவை
அகவையும் தேவை
அனுபவம் பேசிய மனிதரை
தவிர்த்ததால்
தள்ளப்பட்டாள்
தன் பயணத்தையும் தொலைத்தாள்
தனிமையும் வாழ்வை மாற்றுமோ?
தரணியை ஆளுமோ?
பொறுக்கட்டும் காலமும் அவள்
இளமையும்
அவள் தன் வருங்காலத்தை
எதிர்கொள்ள
இருட்டின் பரிசும் வேண்டுமே
வெளிச்சம் தரும் பாதையை நோக்கி

No comments:
Post a Comment