மனம் திறக்கும் பூட்டிற்கு வலியில்லை
மனம் தாங்கும் பூட்டிற்கோ வேறு வழியில்லை
சாவியில்லா பூட்டு பாரத்தை தாங்க மட்டுமே
சாவி தொலைந்த பூட்டு தன்னிலை மறந்தது.
தொலைந்து போன பூட்டின் சாவியும்
அதன் பயன் அறிந்தே அமையும்
சாவியில்லா மரப் பூட்டு என்றும் கண்காட்சிக்கே
சாவி தொலைந்ததால் பூட்டின் பய(ண) (னு)ம் தடைபட்டது

No comments:
Post a Comment