எதையும் அணைக்க தெரியாத கைகள்
இதை அணைத்தது இரவை
கழிப்பதற்காக
கரங்கள் இரண்டு காணாது
இறுகப் பற்ற
நித்திரையை துறக்க வைப்பதும் நீயே!
நித்திரை கொள்ள வைப்பதும் நீயே!
உடையவரை வருட வைப்பதும் நீயே!
அதனால் திறன் இழப்பதும் நீயே!
வாடிய மனங்களுக்கு ஆறுதலும் நீயே!
குழம்பும் தருணத்தில் வீசப்படுவதும்
நீயே!
பற்றில்லாமல் பற்றிக் கொண்டாலும்
நீயே நீயே!
என் இரவை போக்க உறவாக வந்தவனும் நீயே! நீயே!
கடந்த பாதையின் நினைவோடு என்னை கடக்க செய்வதும் நீயே!
மனிதம் தெரியாவிட்டாலும் என் மனதை அறிந்தவனும் நீயே!
அழித்தவனும் நீயே!

நன்று வீனா
ReplyDeleteநன்றி
ReplyDelete