Monday, December 25, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 என் அக வலிகளை

 மறக்க எண்ணி

 சாலையில் நான் 

 பயணிக்க,  

என்னோடு போட்டி

 போட்டு கொண்டு

தானும் முன் செல்ல

வழி தோறும் இந்த

 வான் வரிகள் என் சிந்தையினுள்ளே 

கலந்து என்னை 

அதற்கு சிறையாக்கி

 ரசிகையாக்கி  

 என்னிடம்

 அடைப்பட்டிருந்த  

வலிகளை எட்ட  

வைத்து , 

தன் அழகால்  

என்னை கவர

அதை கண்டு நான்

 மிரட்சி கொள்ள

 வைத்ததின் மாயமென்ன?



பெரும் முயற்சியின் பலனாய் 

கோடு போட்டு சாலை 

அமைத்த மனிதனின் வெற்றி பூமியில்


ஏதுமில்லாமல் பிளவுபட்ட மேகங்களின் அணிவகுப்பு நீலவானில்


 சலனமில்லாமல் 

 நேர்த்தியாய், 

மனிதனுக்கு சவாலாய் மாறியதன் காரணமென்ன?


வலிகளையும் வரமாய்

மாற்றும் சக்தி ஒருவனுக்கே!

அவன் ஒருவனுக்கே!

அவனே இயற்கை!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...