இணைந்த கால்கள் சடங்கின் போது மட்டுமே தானோ?
சரித்திரம் படைக்க ஒன்றிணைந்த கால்கள் வார்த்தைகளால்
சரிந்து போவதேன்
துணிந்து முன் வைக்கும் கால்கள் பாதியிலேயே துவண்டு நிற்பதேன்
மூன்று முடிச்சு இட்ட பின் அதை அவிழ்க்க முயல் வேகத்தில் முடிவேடுப்பதேன்
பெருமை கொள்ள அல்ல திருமணம் பொறுமையோடு வாழவே என்பதை மறப்பதேன்
தாம்பத்தியத்தில் பல காரணம் காட்டி அனுசரித்து போக மறுப்பதேன்
மனமும் உடலும் சேர்ந்த பின் அந்த பந்தத்தை சிதைப்பதேன்
அறியாத பல கேள்விகள் இருக்க அருவி போல் கொட்டும் நீராக கடலில் கலப்பதேன்
இதுவும் வாழ்க்கை தான் என்று உணராமல் வசந்தத்தை கடப்பதேன்
அறுசுவை எல்லாமும் அவசியம் உளமார உண்டு மகிழ
தனியே சிந்திப்பதை விடுத்து துணையோடு கரம் சேர்த்து ஆலோசிக்க முனையுங்கள்
முதிர்வு கொள்ளும் மனமும் இளமையிலேயே
மனம் செரா திருமணம் மணம் சேர்க்குமா?
மறுமணத்திற்கு தான் சிரம் ஆட்டுமா?

No comments:
Post a Comment