Tuesday, December 26, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


தனித்திருப்பதும் அழகே!


ஒற்றை திலகமும்

ஒருகல் முக்குத்தியும்

ஒரு கண்ணின் அழகும்

விழியின் பார்வையும்

ஒர் திசை கோணமும்


தேடுவது எவரை?


தனிமை என்னும் சிகரத்தை


 நேற்றிபொட்டின் சிவப்பும்

விழியின் வனப்பும்

பார்வையின் ரசிப்பும்

புருவத்தின் அழைப்பும்

இமைகளின் துடிப்பும்

நாசியின் சுவாசமும்

அதில் கொண்ட மூக்குத்தியும்


கொள்ளை கொள்ள செய்கிறது

என் விழிகளை


உன் பெண்மையின் அழகை ரசிக்க சொல்லி


விழியின் தேடல்


மணவாளனுக்கான காதலா?


மழலைக்கான தேடலா?


மகிழ்விற்கான மடலா?


மருத்துவத்திற்காக அச்சமா?


மகத்துவம் பெறுவதற்கான வாய்ப்பா ?


மறப்பதற்கான காரணமா?


மறுத்ததின் பயனாய் ஏமாற்றமா?


மாறுதலுக்கான வழியா?


மன்னிப்பு கோருவதற்கான பார்வையா?


மாலையை வரவேற்பதற்கான சுடரா?


மனக்குமுறலின் வெளிப்பாடா?


மலரின் தேடலும் எதுவோ?


மங்கையின் தேடலும் வசப்படுமோ?


மறைந்து நோக்கினால் நம்


மனம் தெளிவும் கொள்ளுமோ?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...