என்னில் பாதியாய் புகுந்த நீ முழுதுமாக கடத்திக் கொண்டாய்.
சரிபாதி போய் முழுதுமாக நீயே நிறைந்து போனாய்.
காலில் பூட்டிய கொலுசு போல் என் மனதை உன் பார்வையில் பூட்டி விட்டாயே.
இங்கே பூட்டுகள் இல்லை ஆனாலும் மனங்கள் மட்டும் ஒன்றை ஒன்று பூட்டிக்கொண்டு தவிக்கிறதே.
நீ நீயாக இருக்கும் போதும் நான் நானாக இருக்கும் போதும் மட்டுமே நாம் என்ற உறவு வளர்கிறதே.
ஒன்றை ஒன்று சார்ந்தும், தனித்தும்,புரிந்தும், விட்டுக்கொடுத்தும் சரிபாதியாக நிற்க தொடரும் இந்த பயணம் இனிமையாய் .
நாம் இருவர் நமக்கு இருவர்.
நாம் இருவர் நமக்கு ஒருவர்.
நாம் இருவர் எதற்கு ஒருவர்...நாமே
சரிபாதியாக மோதிக்கொள்ள நேரமில்லையே.

No comments:
Post a Comment