Sunday, December 24, 2023

நீ யார் by Veena Shankar

 


நீ யார்?


எதில் உனை இட்டாலும் வேகமாய் கரைந்தாய்


என் மனதில் கொள்ளை கொண்டு என்னுள்ளே கலந்தாய்


எண்ணத்தில் அறிமுகமாகி வித்தகனாய் மாறினாய்


பலர் கை வண்ணத்தில் சிறப்பாய் மிளிர்ந்தாய் 


உன்னை நான் சூறையாட தீர்ந்தும் போனாய்


என் செயலை பிறர் அறியாமல் நடக்கவும் செய்தாய்


சலனமில்லாத என்னை தேவையால் கவர வைத்தாய்


நானும் நீயும் செய்த செயலால் என் மனதை உடையவும் செய்தாய்


முதுமையில் என்னுடனேயே பிரியமாய் சேர்ந்தாய்


பதட்டமாய் என்னுள் ஏற்ற இறக்கம் கொண்டாய்


நீ யார் என்பது எனக்கு தெரிந்தாலும்


உன்னை யாரென்று கண்டுபிடிக்க அடுத்தவருக்கு அவகாசமும் தேவை தானே?


அவசியமும் உண்டே!


நீ யார் என்ற உண்மையை பிறரிடம் கண்டுபிடிக்க சொல்வோமா?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...