Tuesday, December 19, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


எதையும் அணைக்க தெரியாத கைகள்

 இதை அணைத்தது இரவை

 கழிப்பதற்காக

கரங்கள் இரண்டு காணாது

இறுகப் பற்ற

நித்திரையை துறக்க வைப்பதும் நீயே!


நித்திரை கொள்ள வைப்பதும் நீயே!


உடையவரை வருட வைப்பதும் நீயே!


அதனால் திறன் இழப்பதும் நீயே!


வாடிய மனங்களுக்கு ஆறுதலும் நீயே!


குழம்பும் தருணத்தில் வீசப்படுவதும்

 நீயே!


பற்றில்லாமல் பற்றிக் கொண்டாலும்

 நீயே நீயே!


என் இரவை போக்க உறவாக வந்தவனும் நீயே! நீயே!


கடந்த பாதையின் நினைவோடு என்னை கடக்க செய்வதும் நீயே!


மனிதம் தெரியாவிட்டாலும் என் மனதை அறிந்தவனும் நீயே!

அழித்தவனும் நீயே!

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...