சிமெண்ட் கற்களுக்கு நடுவே பொருத்தமற்றதாய் தோற்றத்தில் தெரிந்தாலும் வலிமையில் சளைத்ததல்ல இந்த சுட்ட கற்கள்
கண்மூடித்தனமாக இருக்கும் மனிதர்கள் நடக்கும் பாதையில் பள்ளம் இருப்பதை உணராமல் செல்வதால் எழும் அபாயத்திற்கு விடை கொடுக்கவே நான் இங்கே உயிர்த்தேன்
மனிதா!
உன்னை போல் மாற்றி விடாதே! நீ படைத்தவற்றிலும்
ஜாதி என்பதில்லை எங்கள் பிறப்பில் வலிமைக்கு தோல் கொடுக்கும் எங்களிடம்
இப்படிக்கு
கற்கள்
என்னை அப்படியே நீங்கள் ஏற்று கொள்ள வேண்டியது இல்லை, என்னை இரண்டாக்குங்கள் உங்களின் வடிவத்திற்கு பொருந்தி விடுவேன் என்கிறது இடத்திற்கு ஏற்றார் போல் தன் உடம்பை நொறுக்கி வடிவத்தை இழக்கும் செங்கல்
என் இடத்தை மாற்றி கொள்கிறேன், நான் இருக்கும் இடத்தில் புல் , பூண்டு வளர
துளையை மூடுவதற்கான ஒரு சிறு முயற்சி என்று சொல்லலாம்

No comments:
Post a Comment