மரம் பெரியதா? இல்லை என் இறக்கை பெரியதா? பதில் எதுவோ?
மனிதரிடம் இருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள மரத்தில் தஞ்சம் கொண்டேன். ஆனால் நினைக்கவில்லை அவன் மரத்தையும் வெட்டி சாய்ப்பான் என்று
வெற்றி கனியை தொட்டுவிட்ட மகிழ்ச்சியோ இந்த மயிலுக்கு, மேகங்களை கண்டு சிறகு விரிக்க காத்திருக்கிறதோ?
சிறகை விரித்து காட்டாவிட்டாலும் உன் அழகில் மயங்கும் பெண் மயிலான நான்
மரத்தில் வீற்றிருக்கும் நீயான ஆண்மயிலே! என்னை உனதாக்கி கொண்டு ஆள் மயிலே! என்ற பேச்சை கேட்டு சுற்றும் முற்றும் பார்க்கும் ஆண் மயில் மையலோடு

No comments:
Post a Comment