இனிமையும் கடுமையும் ஒரே சேர அமைந்த பழம்
பக்கத்து வீட்டில் நட்டு, அடுத்த வீட்டை எட்டி பார்த்த நான் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை இரு வீட்டினருக்கு இடையே நடக்க, அது முடிவதற்குள் சந்தைக்கு கடத்தி கொண்டு வரப்பட்டேன் நான், பழுத்து முதிர்ந்ததால்
தன் இருப்பிடத்தை மறந்து எட்டி பார்க்கிறது என்னை போல் ஒற்றுமையாய் வீட்டில் எவர் இருக்கிறர் என்று பல சுளைகளையும் சுவைகளையும் கொண்ட பலாப்பழம்
ஒன்றுபட்டேன் இயற்கையால் மனிதர்கள் என்னை பிரித்து சுவைத்து மகிழ
கடின தன்மைக்கு உதாரணமானேன் என் உடலால், இனிக்க வைத்தேன் என் சுவையால்
கார்மேகம் திரண்டால் மழை, நான் பழுத்தாள் சந்தை

No comments:
Post a Comment