பற்றுவதற்கு கயிறு இருந்தாலும் கொடிக்கும் தேவைப்படுகிறது அடைக்கலம், பூட்டின் துளை வழியே
இது வளர்ச்சியில்லா குழந்தை, பலன் தரும் என்ற எதிர்பார்ப்பு கூடாது. இதன் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அங்கேயே அப்படியே
துறு ஏறிப் போன இரும்பென்றாலும் துளிர்விடும் பசுமை. உள்ளே மழை நீரின் மகத்துவத்தால்
அரச இலைகள் துளிர்விடும் எங்கும் அட்சர லட்சணமாய்
ஆர்வத்தின் புது முயற்சி, இனி பூட்டுகளிலும் அறுவடை பார்க்கலாம்
பூமியில் இடமில்லை இந்த மதி கெட்ட மனிதர்களின் ஆக்கிரமிப்பால், அதனால் வளர்க்கப்பட்டேன் பூட்டிலும் தொட்டிகளிலும் தேவையில்லா பொருட்களிலும் மாற்றாந்தாய் பிள்ளையாக

No comments:
Post a Comment