வாழ்க்கை
வாழ தெரிந்தோர்க்கு மட்டுமே இன்பம் தானோ?
வசதியுள்ளவர்களுக் கும் குணத்தில் வறுமை தானோ?
பரிகாசம் செய்வோருக்கு சொர்க்கம தானோ?
ஏற்றம் கொள்வோருக்கு போற்றதல் தானோ?
இறக்கம் அடைந்தோருக்கு கலக்கம் தானோ?
இரக்கம் கொண்டோருக்கு ஏமாற்றம் தானோ?
களம் தேடும் வித்தகருக்கும் விடியல் தானோ?
காட்சிகள் தவறுவதும் மறு ஆக்கத்திற்கு தானோ?
வழிந்தோடும் கண்ணீரும் வடிந்தோடும் வெள்ளம் தானோ?
சந்தர்ப்பத்தால் மாறுவதும் இயல்பு தானோ?
சாத்திரங்களுக்கு பாத்திரமாவதும் உண்மை தானோ?
வாழ்க்கையில் தேடுவதும் மனிதம் தானோ?
பல பரிணாமங்களை கொண்ட அற்புத வட்டமும் வாழ்க்கை தானோ?
இதை சொல்ல தூண்டுவதும் வாழ்க்கையின் விளையாட்டு தானோ?

No comments:
Post a Comment