தன் இனத்தை அழிக்கும் மனிதனை மன்னித்து , அவன் சந்ததியாவது நிலைக்கட்டும் என்ற எண்ணத்தில் அவன் உயிரை காப்பாற்றும் பறவை.
சிறகொடிந்த பறவைக்கு சிறகுள்ள பறவையின் பார்வையும் தேவையும்
போதைக்கு அடிமையாகி உயிருக்கு போராடுபவனை தூக்கி நிறுத்த முயலும் , எப்போதும் தண்ணீரிலேயே மிதக்கும் பறவை.
இம்முறை பறவையின் வலையில் சிக்கியவன் மனிதனோ? அல்லது விலங்கோ?
மனித வல்லூறுகளை பதம் பார்த்த பறவை
இரையினை கொத்தி தின்ன தயாராகும் பறவை,
கூட்டத்தோடு பகிர்ந்து உண்ண எண்ணி தூக்கி செல்லும் பறவை,
ஒரு மனிதனின் இழப்பால் அதன் முழு இனத்திற்கும் விருந்தானது இன்று
கொத்தி தின்னும் பறவையும் மனித உயிரை கொத்தி காப்பாற்றும் முயற்சியும்

No comments:
Post a Comment