கண்ட காட்சி அற்புதம்
கண்டதும் மயக்கம் கொள்ளச் செய்யும் மேனியோ?
செந்நிறமும் பொன்னிறமும் மின்னும் வடிவமோ?
நீராடி நீராடி குளிர்ச்சியடைந்த மனமோ?
சரீரத்தில் தினம் பூத்து பூத்து குலுங்கும் சோலையோ?
புன்னகையும் பொன்னகையும் ஒருசேர கொண்ட களையோ?
அழகு செய்ய செய்ய சிம்மாசனம் அடையும் பொலிவோ?
சூடிய பூவும் அழகு பட்டாடையையும் கொண்ட திருவுருவமோ?
காண காண மனம் குளிரச் செய்யும் நறுமணமோ?
வாயால் பாட பாட கருணை ஒளி கொடுக்கும் சுடரோ?
கண்டதும் காதல் கொள்ள தூண்டும் காட்சியோ?
ரசித்ததில் காலம் போனதும் நான் மயங்கியதும் சொல்லவும் முடியுமோ?
அழகும் சுகந்தமும் ஒரு சேர திளைக்கும் இடமோ?
ஆஹா ! அற்புதம். உற்சவ மூர்த்தியின் திருமஞ்சனமும், நெஞ்சை கொள்ளை கொள்ள நான் பெற்ற வரமும்
வாயினாற் பாடி மனதினால் சிந்தித்து...

No comments:
Post a Comment