ஒற்றை செடியில் மலர்ந்த இரட்டை
மலர்கள் நாங்கள் .உடலெல்லாம்
முட்கள் பூக்க யாரும் அதை
பார்ப்பதில்லை .எங்களின் அழகில்
மயங்கி கையை பதம் பார்த்துக்
கொள்கின்றனர்.கிள்ளினால் இரத்தம்
வரும் சிவப்பு .முள்ளில்லா மீன்
ருசிக்காது முள்ளோடு ரோஜா
அழகு.இருவரும் மலர்ந்தோம் ஒன்றாக
உதிரும் போது எப்படியோ .வாழும்
வரை கொண்டாட்டம் நாளைப் பற்றிய
கவலையில்லை.இரட்டை ரோஜா யார்
வீட்டு ராஜா பறிக்க
காத்திருக்கின்றன .

அழகோ அழகு ரோஜா மற்றும் வித்யாவின் வரிகள்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete