என்னவென்று சொல்லுவது இரு
பருவ குழந்தைகளின் விளையாட்டு..
என்பதைவிட ஆசை.எல்லோரும்
இதை கடந்து தான் வந்திருப்போம்.
காலையில் எழுந்து அவரின்
நம்பிக்கையின் வடிவை குளிக்க
வைத்து அன்று மலர்ந்த மலரை
வைத்து அலங்கரித்து அழகு பார்க்க
ஒரு குழந்தை.பருவத்தால் முதிர்ந்து
அனைத்துலக இன்ப துன்பத்தை
கடந்து இன்று குழந்தை மனம்
கொண்டு முதிர்ந்த பக்குவத்தின்
வடிவம்.
மறுபுறம் இன்னும் காலம் இருக்க
வயதால் பக்குவமடையாத செயலில்
முதிர்ந்து சமைத்து உண்ண ஆசை
கொண்டு அதை அடைந்த ஆசையில்
ஒரு களிப்பு .
இந்த எண்பது மற்றும் பதினொன்றின்
விளையாட்டில் கண்டது இடையில்
இருக்கும் பருவத்தில் கடந்து
வந்ததையும், கடக்க போவதையும்
கண்ட மகிழ்ச்சி.உணர்ந்த பாடம்
எதையும் மனம் விரும்பியது போல்
பிறர் மனம் நோகாமல் வாழ்ந்தால்
போதும் என்றே.

No comments:
Post a Comment