நினைவுகள் ஆழமானது தோண்ட
தோண்ட ஊறும் ஊற்று போல்
சுவையாக,மணமாக,உணர்வாக பல
விதமாக ...சிறு செல்கள் சேர்ந்து
உயிராக உருவெடுப்பது போல்
இங்கு காற்றில் கரைந்து மேகத்தில்
மிதக்கும் பறவைப்போல் நினைவுகள்
ஒன்றை ஒன்று தொட்டு, கலைந்த
பூக்களை எடுத்து ஒன்றாக தொடுத்த
ஒரு மாலையாக, வைர மாலையாக
ஜொலிக்கிறதே.
நேற்றைய பதிவான பள்ளி
நினைவுகள் வழி வழியாக வந்த
பாதையில் நடந்த செல்ல
குறும்புகளை ,நினைவுகளை
தொட்டு சென்றது.ஒரே கூடத்தில்
இருபதுக்கும் மேல் ஒரே
குடும்பத்திலிருந்து படித்துள்ளோம்
என்பதை நினைக்கும் போது
ஆச்சரியமாக உள்ளது.

No comments:
Post a Comment