Tuesday, July 18, 2023

இந்த வாரத்தலைப்பு "கிணறு " by Kiruthika

 


கிணறு கிணறு..

தோண்ட தோண்ட..

பூதம் இல்லை ..!!..

தித்திக்கும் நினைவு அலைகள் தான் கிளம்புகிறது !!!

நான் சிறுமியாக இருந்த போது ..

சித்தி வீட்டு கிணறு ..

சுற்றி - சித்தி ..அம்மா .. பெரியம்மா..அத்தை .. அண்ணி என ஒரு கூட்டமே ..கதையடிக்கும்!!!

நாலு குடம் தண்ணீர் எடுக்க வந்த சாக்கில் ...

என்ன தான் பேசுகிறார்கள் ..என குட்டீஸ் நாங்கள் எத்தனை முறை ..

கிணற்றை சுத்தி வந்தாலும் ..

ஒன்னும் விளங்காது!!!..

கடைசியில் அடுப்பங்கரையில் இருந்து ஒரு சத்தம் ..

அம்மாச்சியிடம் இருந்து ..

இன்னுமா தண்ணீர் எடுக்கலன்னு ...

அவ்வளவு தான் ..

சத்தம் இன்றி கலைவார்கள் அனைவரும் !!!!..

இன்று தொலைப்பேசியில் பதிவு செய்ய ..வாசல் வந்து நிற்கும் தண்ணீர் குவளைக்கு என்ன தெரியும் ..இங்கு தொலைந்து போன அரட்டை கதைகள் பற்றி யும்..சின்ன சின்ன சந்தோஷங்கள் பற்றியும் !!!

1 comment:

  1. முற்றிலும் உண்மை கிருத்திகா. அருமை

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...