கண்கள் குளமாவது ஏன்?
வலியா? இயலாமையா?
தன்னை யாரும் சுட்டிக்காட்ட
வலிக்கிறதா?
தனிமையா? பயமா?
சுகமான வாழ்க்கை போராட்டமாக
மாறினால் பயமா?
நினைத்தது கிடைக்காத போது வரும்
கோபத்தின் எல்லை என்ன? அதை
கையாளுவது எப்படி?
தன்மையாக பேசு என்கிறோம்
நடப்பது எப்படி?
சிறு குழந்தை சொல்ல கேட்க புத்தி
உரைக்கிறதே !
இந்த கார் மேகம் கூடி அழுது கொட்ட
காத்திருக்க யாரோ வந்து
குடைப்பிடிக்க வந்த திசை போய் ஓரே
புழுக்கமாக புழுங்குதே அதற்கு
அழுகையே மேல்

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDeleteமிக அருமை தோழி
ReplyDeleteநன்றி கிருத்திகா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை வித்யா கார்மேகம் என்ற உடனே நான் எழுதினது எனக்கு ஞாபகம் வந்தது
ReplyDeleteநன்றி தோழரே
Deleteஅண்ணாந்து பார்க்கையில்
ReplyDeleteசட்டென்று முகத்தில் ஒரு நீர்த்துளி
அது மழைத்துளி குளிர்ந்த காற்று என் மேல்
மோதி செல்கிறது
அந்தப் பள்ளத்தாக்கில் குயிலொன்று கூவிய சத்தம்
பாறைகளில் மோதி மோதி பவனி வந்து கொண்டிருந்தது
மாலை நேரத்தில் கார் மேகம் சூழ
அன்று அந்திமாலை விடுப்பில் இருந்தது
நேரம் ஆக ஆக சில்லென்று மழைத்துளி என் மேல்
நனைத்தும் நனைக்காத வாறு
என் மேனி மிருதுவான வெப்பத்தை நோக்கி
மனம் அலைய சட்டென்று தோன்றுகிறாள்
என்னுள் உள்ளவள்
கை கோர்த்து நடந்தோம்
குளிர் என்னை விட்டு விலகி பத்தடி தள்ளி நின்றது
இப்பொழுது அப்படி ஒரு உஷ்ணம்
கை கோர்த்தவாறு பாதை எங்கு போகிறது
என்று தெரியாமல்
கால் ஒரு பக்கம் போக
மனம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது
களிப்பில் வார்த்தை தொண்டையில்
மீன் முள் போல் சிக்கிக்கொள்ள
ஆதிமொழி, விழி மொழி
எண்ணத்தை கடத்துதல் போன்று
வார்த்தை கூடு விட்டு கூடு பாய்ந்தது
அந்த இரவு அப்படியே நீளாதா
என்று தோன்றியது அப்போதுதான்
சூரியன் மேல் எனக்கு வெறுப்பு தோன்றியது
அவள் அருகில் தோளோடு தோள் உரச
சட்டென்று அப்பா மின்விசிறி அணைக்க
அம்மா இன்னுமா தூங்குற டேய் எந்திரி
---சின்னா
அழகு ..கனவு கொஞ்சம் நீளாதா என்று படிப்பவருக்கும்😊 அருமை
ReplyDelete