கால்கள்
அனைவரும் போற்றி காக்க
வேண்டிய உன்னை தினமும் ஒரு
நொடி கூட நினைக்க நேரமில்லை .பூ
போன்று மென்மையாக படைக்கப்பட்ட
காலை பாரங்கற்கள் போல்
பாறையாக பாறையாக வெடித்து அது
வலிக்கும் போது தான் தெரியும்
தினமும் நம் சுமை தாங்கும் காலை
கையால் கூட தொட்டு
பார்க்கவில்லை என்று .கால்களே நம்
ஆரோக்கியத்தை குறிக்கும்
ஆணிவேர்.அது ஆடினால் சகலமும்
ஆடும்.
இளமையில் அழகுக்காக பலவற்றை
போட்டு நடந்து அது பழுதடையும்
போதே உரைக்கும்.நம் பாதங்கள்
நோகாமல் இருக்க ஓடிய பாதங்களை
ஒருமுறை பாருங்களே மனம்
வலிக்கும்.
அகத்தின் அழகை காட்டும் கண்ணாடி
கால்கள். உன் துணையில்லாமல் ஒரு
அடிக்கூட நகர முடியாது.அப்படிப்பட்ட
உன் துணையில்லா போதே
உணர்ந்தேன் உன் அருமை.

அற்புதமான கருத்து. மிக அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete