இணைப்போடு பிறந்து துண்டிக்கப்படுகிறோம் . இந்த உலகில் பல அனுபவங்களை பெற.ஆனாலும் உடலால் துண்டிக்கப்பட்ட நாம் உறவால், உணர்வால் இணைக்கப்படுகிறோம்.
துண்டிக்கப்பட்டு தனித்து நிற்கவே மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் பழக்கப்படுகிறது.
இணைப்பு - பிரிவு உறவுகளில், பலநிலைகளில்... உளவியல் ரீதியாக பல பிரிவுகள் இருக்கு இணைப்பில்..ஒரு காலகட்டத்தில் தனிமை,பிரிவு இதை அனைவரும் சந்திக்க நேரிடும்.முதுமையில் துணையை பிரியும் போது பலர் நாட்களை எண்ண தொடங்குகின்றனர்.ஐம்பது,அறுபது வருட பிணைப்பு அதன் பின்?
பாலுமகேந்திராவின் அம்மா பழசு நல்ல முடிவு-வருங்காலத்தின் கணிப்பு. காபி காரம் இனிப்பு புதுசு ஆனா பழசு.அதுவே தொடருது இன்றும்.
பிள்ளைகளின் பிரிவு ஒருவிதமான தனிமை ,வெற்றிடத்தை உண்டாக்கும்.
எப்படி கையாளுவது! பார்த்தது, கேட்டதில் பிடித்தது. வாழ் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்காலத்தில், இது தான் நமக்கான நேரம் விட்டதை ரசிக்க, சாதிக்க, பறக்க .ஒரு புதுப்பிறவி. மாங்காய்,உப்பு பார்த்தால் நாவில் உமிழ்நீர் சுரப்பதே வாழ்க்கை.உமிழ்நீர் சுரப்பது நிற்காதே.பிரிவுக்கு பின் மீண்டும் இணைப்பை தேடி அலைந்தால் இழப்பே.புது விடியல் காத்திருக்கு.பயணங்கள் தொடர..

மிக மிக அருமையான பதிவு வித்யா.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete