Thursday, July 13, 2023

அடங்கிய ஊர் by Vidhya Nivash


 கடைசியாக கொட்டி தீர்த்த மழை

 துளித்துளியாய் அணிவகுத்து நிற்கும்

 மழைத்துளியை தாங்கி நிற்கும் கொடி

 கம்பிகள் சுமையை சுமந்த உடல் 

இன்று நீர் சுமக்க குளிருதே  அதற்கு 

மேலே மின்சாரத்தை கடத்திச் 

செல்லும் மின்கம்பிகள் யாரும் 

அருகில் வரவேண்டாம் என்று ஆந்தை 

போல் முழிக்க மழையில் கூட்டில் 

அடங்கி இருக்கும் குருவிகளின் காதல் 

கீதம் கண்டு காற்றில் உரசி 

கொள்ளும் தென்னை மரங்கள் 

மழையோடு வீசும் காதல் கீதம் 

ஊரெங்கும் வீச அடங்கிய ஊர்

 அடங்காதா தலைவியின் உள்ளம்

 தன்னை கடத்த ஆளில்லாமல் மணித்

 துளியை கடத்திக் கொண்டிருக்கே..


5 comments:

  1. ஆகா எதைப் பார்த்தாலும் கவிதை எழுதுறீங்க அருமை வித்யா

    ReplyDelete
  2. உங்க கவிதைக்கு என்னுடைய கொசுறு கவிதை

    ReplyDelete
  3. காலையில் உன் சிந்தை
    கண்ணம்மா
    என் மண்டையில்
    ஓடுதடி கண்ணம்மா

    பார்க்கும் பகல் எல்லம்
    கண்ணம்மா
    உன் போல் காட்சி தெரியுதடி
    கண்ணம்மா

    வாங்கும் மூச்சினிலே
    கண்ணம்மா
    உன் வாசம் தோன்றுதடி
    கண்ணம்மா

    சோற்று பருக்கை எல்லாம்
    கண்ணம்மா
    உன் முகம் தோன்றி மறையுதடி
    கண்ணம்மா

    ஆற்றில் குளிக்கையிலே
    கண்ணம்மா
    உன் தேகம் தெரியுதாடி
    கண்ணம்மா

    தூங்கும் வேலையெல்லாம்
    கண்ணம்மா
    கண்கள் ஏக்கம் கொள்ளுதடி
    கண்ணம்மா

    (கண்ணம்மாவை பாரதியிடம்
    கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)

    ----சின்னா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...