Tuesday, July 18, 2023

இந்த வாரத்தலைப்பு "கிணறு" by Vidhya Nivash

 


பல தலைமுறைகள் கண்டாய் நீ

 கேட்காத கதைகளும் இல்லை, கனவும்

 இல்லை. அள்ள அள்ள வளர்வாய்,

 மழை பெய்தால் குளிர்வாய்.

 கோடையில் பலருக்கு இருக்கும் ஓரே

 குற்றாலம் நீ .உன்னில் எட்டி

 கத்தாதவரில்லை. உன்னை

வெறுக்காதவரும் இல்லை.சரசரவெ

இறங்கும் கயிற்றில் வாளி வந்து

 தொப்பென்று விழும் சத்தம் இனிமை.

 அதுவே கைநழுவி விழ அந்த பாதள

 சங்கிலி வைத்து வாளியை

 எடுப்பதற்காக ஒரு போராட்டமே

 அரங்கேறும்.பல தலைமுறை கண்ட

 உன்னை இன்று யாரும் பார்க்காத

 மாதிரி மூடிவிட்டோம்.உடலை இழந்தும்

 இன்றும் ஊறிக்கொண்டு தான்

 இருக்கிறாய் மறைவில், நினைவில்

 என் இளமைக்கால தோழனே.

4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...