பல தலைமுறைகள் கண்டாய் நீ
கேட்காத கதைகளும் இல்லை, கனவும்
இல்லை. அள்ள அள்ள வளர்வாய்,
மழை பெய்தால் குளிர்வாய்.
கோடையில் பலருக்கு இருக்கும் ஓரே
குற்றாலம் நீ .உன்னில் எட்டி
கத்தாதவரில்லை. உன்னை
வெறுக்காதவரும் இல்லை.சரசரவென
இறங்கும் கயிற்றில் வாளி வந்து
தொப்பென்று விழும் சத்தம் இனிமை.
அதுவே கைநழுவி விழ அந்த பாதள
சங்கிலி வைத்து வாளியை
எடுப்பதற்காக ஒரு போராட்டமே
அரங்கேறும்.பல தலைமுறை கண்ட
உன்னை இன்று யாரும் பார்க்காத
மாதிரி மூடிவிட்டோம்.உடலை இழந்தும்
இன்றும் ஊறிக்கொண்டு தான்
இருக்கிறாய் மறைவில், நினைவில்
என் இளமைக்கால தோழனே.

ஆம் உண்மை வித்யா
ReplyDelete🙏
Deleteதொலைத்த .. சுடும்..நிஜம் ..
ReplyDeleteஆம்🙏
ReplyDelete