Tuesday, October 24, 2023

கேள்வி by Kiruthika

 


கலைகள்இல்லாது..

ரசனை ஏது..?!!..

ரசனைஇல்லாது -

மனதில்..

ஜீவன் ஏது?!!!

இந்த ஜீவன் இல்லாது போனால்...?!?!..

நாம் ..

உருகும் போதும் ..

உருக்குலைந்து போகும் போதும் ..

தன்னிலை தேற்ற..

யார் தான் உண்டு இங்கே ..?!!?!!..

சொல்ல முடியாத போது..

கேட்க செவி இல்லாத போது..

மறுக்க முடியா ..

மறக்க முடியா..

துணை அல்லவா -

நமது கை சேர்ந்த ..

நாம் அகம் புகுந்த .

இக்கலைகள்!!!.....


மென்மை சேர்க்க..

தருணம் இணிக்க..

மனம் இளைப்பாற...

கோபம் அடக்க...

சோகம் மறக்க...

திறமை மெருகேற..


ஆயகலைகளில் ஒன்றை தான் ..

இறுக கைப் பற்றிக் கொள்ள ...

இசைந்திடுவோம் ..!!

இதயத்தில் இருந்து..!!..


தக்க தருணம் ..

வர காத்து ஏன்

இருக்கணும்??!!..


நல்லது செய்ய 

ஆரம்பிக்கும்..

எல்லா கணமும் ..

நல்ல நேரமே..

சுப முகூர்த்தமே !...

 

சிலையாய் ..

எங்களை காண வேண்டாம் ..!!

எங்கள் உணர்வுகள் சிதைக்காது..

எங்கள் உணர்ச்சிகள்

ஒடுக்காது..

எங்களை..

மனம் கொண்ட 

பெண்ணாய்..

உங்களை போல்..

தான் -

நாங்களும் ..

என பார்த்தாலே 

போதும்...!!!..


வரம் தா என யாசிக்க 

வில்லை ...!!!..

தவம் தந்த வரமாய் ..

இந்த வாழ்வாய் ..

சேர்ந்து வாழ்வோமே ..

என்றே 

அழைக்கிறோம் !!..

நீங்கள் நவராத்திரியில் ..

பூஜித்த பெண்களாய் ..!!..

இங்கே ..

உயிர்த்தெழுந்து !!!.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...