சொல்வது யாது?
பிறப்பின் பெருமையை காலம் சொல்லும்
இறப்பின் முடிவை காலன் சொல்வான்
தவிப்பின் காரணத்தை அழுகை சொல்லும்
தவிர்ப்பின் பொருளை விளைவு சொல்லும்
பசியின் கொடுமையை வயிறு சொல்லும்
பரிவின் வார்த்தையை அன்பு சொல்லும்
பொருளின் பயனை தரம் சொல்லும்
வாழ்வின் மகிழ்ச்சியை வரம் சொல்லும்
அகத்தின் அழகை முகம் சொல்லும்
சுகத்தின் மேன்மையை உடல் சொல்லும்
வளர்ச்சியின் மூலத்தை அறிவு சொல்லும்
சுழற்சியின் வேகத்தை
செறிவு சொல்லும்
கவர்ச்சியின் எல்லையை உடை சொல்லும்
நடிப்பின் திறமையை
நடை சொல்லும்

No comments:
Post a Comment