உன்னை கதவின் இடையிலிருந்து என்னை மறைத்து ரசித்தேன்
உன் புன்னகையை என் விழியால் படம் பிடித்து மகிழ்ந்தேன்
உன் விழியால் என் நிஜத்தை ரசிக்க நிமிர்ந்து நின்றேன்
உன் கன்னத்தில் விழுந்த குழியை என் கரங்கொண்டு தாங்க நினைத்தேன்
உன் கால்கள் என் நிழல் தொடர அசையாமல் நின்றேன்
உன் அழுகுரலுக்கு என்னை மறந்து உன்னை ஏந்தினேன்
உன் இதழ் விரிய நான் சோறு ஊட்டி சிலிர்த்தேன்
உன் கைவிரல் கோர்த்து என்னோடு நடைக்கையில் பெருமிதம் உணர்ந்தேன்
நீ என்னை கட்டியணைக்க நான் உனக்கு முத்தம் கொடுக்க மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றேன்
உன்னை இப்படி தேவதையாய் பெற்றவள் யாரோ என நினைத்து மெய் மறந்தேன்
உன் மேல் பொய்யான கோபம் கொள்ளும் நானும் அது மெய்யல்ல என நீயும் உணர்வாய்
என் மகளே!
உலகின் மொத்த அழகையும் உன் முகத்தில் கண்டுவிட்ட ஆனந்தம் என்னுள்ளே
நீ பிறந்த நொடியிலிருந்து இன்று வரை உன்னால் மயக்கப்பட்டது நான் மட்டுமே!

No comments:
Post a Comment