விரிந்தது உலகம்
பறந்தது மனது
சிறந்தது தருணம்
துறந்தது நினைவு
வான் தாண்டி பயணம் போகும் போது
மனமும் உடலும் சுமந்து செல்வது
பசுமையான நினைவுகளும்
அருமையான ஸ்நேகங்களும்
இந்த பயணம் எதற்காக?
படிப்பதற்காக உதயமாவதா?
பிடிவாதத்தால் செல்வதா?
குடியுயர வேண்டி பறப்பதா?
குடியுரிமை கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் கடப்பதா ?
அடி மேல் அடி வைத்து தாவுவதா?
கொடி நாட்ட விரும்பி செல்வதா?
ஓடி ஓடி சளைக்காமல் எட்டுவதா?
நிர்பந்தத்தால் உடன் செல்வதா?

No comments:
Post a Comment