வாழ்க்கை என்பது
ஓவியமல்ல வரைந்து பார்க்க
கிறுக்கல் அல்ல அழித்து மறைக்க
விளையாட்டு பொம்மையல்ல எளிதில்
கையாள
நிரந்தரமல்ல அடுத்தவரை குற்றம்
சொல்ல
வெறுமை அல்ல துணிந்து நடக்க
காட்சி பொருளல்ல கண்டு களிக்க
தேடிய செல்வம் அல்ல பிரித்து
கொடுக்க
அது ஓர் அனுபவம், தனி மனிதன்
மட்டுமே
தெரிந்து கொள்ள ,
புரிந்து நடக்க ,
தெளிந்து வாழ
சிறு வினா
என்னிடம் பிறர் இணக்கமாக இருக்க
அவர்களை புரிந்து கொள்ளும் மனம்
கேட்டேன். ஆனால் பிறரை புரிந்து
கொள்ளும் புத்தியை கொடுத்து
காரியவாதியான அவர்களிடமிருந்து
என்னை விலக்கி வைத்தாயே
இறைவா! ஏன்?

No comments:
Post a Comment