எழுத்தாளர் தோரோவின் படித்ததில் பிடித்த வரிகள்..
மனிதன் மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பது சமூகக் குற்றம் என்றால்
தனக்குத் தானே அடிமையாக இருப்பது அகவிடுதலையற்றநெருக்கடி நிலை.
மனிதனுக்கு தேவையற்ற சுமையாக இருப்பது பணமே.அதை அடைவதற்கு
வாழ்க்கையில் பல நேரத்தை தொலைப்பதற்கு பதில் அடிப்படை
தேவைகளை வரையறுத்து தனக்கு தானே வாழ்ந்தால் என்ன..
எவ்வளவு அருமையான வரிகள்
பிறரை கண்டு பாவம் என்பதற்கு முன்
நமக்கு நாமே போட்டு கொண்ட
தடைகள் எத்தனை.அதை முதலில்
கலைந்தாலே அடையும் நிறைவு,
மகிழ்ச்சி அதிகம் .இல்லையேல்
அதுவே மன அழுத்தமாக, பயமாக
மாறி பல தடைகளை நமக்கு நாமே
உருவாக்க காரணமாகிறது.
பணம்,ஆடம்பரம் இது பல
மகிழ்ச்சியை வாங்கி தந்தாலும் அதை
அடைந்த பலரும் கடைசியில்
சாதாரணமாக கடற்கரையில், பிடித்த
டீக்கடையில், வளர்ந்த வீட்டில் சில
மணி நேரம் உறங்கும் போதே நிம்மதி
கிடைக்கிறது.ஆடம்பரத்திற்காக ஓடி
நேரத்தை கழிக்காமல் அடிப்படை
தேவைக்கு ஓடினால் போதும் தானே.

No comments:
Post a Comment