பட்டாம்பூச்சிபோல் பறந்து வரும்
சின்னஞ்சிறு கண்ணே..
நேற்று வரை தெருவில் சுற்றி
திரிந்தேன்...
கால் ஓடிய தூரம் சென்று
வழியெங்கும் ஆடி சென்றேன்.
கூண்டில் அடைந்த பறவை போல்
செயலற்று போனேன் !
இன்று என்ன ஆனது அம்மா
சொன்னாள் ஒதுங்கி நின்றேன்!
எங்கு சென்றாலும் பயம் ஒதுங்கி நிக்க
சொல்லுது மனம்!
ஏன் இந்த பயத்தை வளர்ப்போம்! நாம்
சுமந்ததை நம் குழந்தையும் சுமக்க
வேண்டுமா??
அதுவும் உங்கள் கையிலே..
புதியதோர் விதி செய்து அதில் நன்மை
தீமை புகட்டி, பயத்தை அறுத்து,
தூய்மையில் நின்று, நம்
சின்னஞ்சிறு கண்களை,
செல்வங்களை காப்போம் ..

அருமையான புரட்சி எழுத்து. அருமை வித்யா
ReplyDelete