Saturday, September 30, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


பூனை பிடிப்பது வால் என்றாலும் படம்

 எடுப்பது உடலை சுருட்டும் பாம்பு


ஒன்றின் விளையாட்டு

 மற்றொன்றிற்கு மரண பயம்,

 எதிரியின் வலிமை தெரியும் வரை


 படம் சொல்கிறது பாடம், படம் எடுக்கும்

 பாம்பிற்கும் தடம் தெரியாமல் நடக்கும்

 பூனைக்கும் மறைந்து தாக்குவது

 கூடாது அவன் எதிரியேயானாலும்


 தவிப்பும் தவிர்ப்பும் கொள்ளும்

 நெஞ்சம் தளிர்க்கும் பிறர்

 வேதனையால்

Friday, September 29, 2023

உலக இதய தினம் by Akhiladevi Kumaran

 




 

உலக இதய தினம் by Veena Shankar

 


இதயமே! என் இதயமே!


எந்திக் கொள்கிறேன் உன்னை

 உடலால் தாங்கிக் கொள்கிறேன்


தானம் கொடுக்கிறேன் உன்னை

 இன்னொருவர் உயிர் பெற

 கொடுக்கிறேன்


தனித்து விடுகிறேன் என் மூளை

 சலித்த பிறகு துறந்து விடுகிறேன்


மூர்ச்சையாகிறேன் நீ அதிகம்

 துடிப்பதை கண்டு கலங்கி

 விடுகிறேன் 


தவிக்க வைக்கிறேன் உன்னை

 அனுதினமும் அதிர வைக்கிறேன்


பயிற்சி செய்கிறேன் உன்னை

 இளமையாய் காட்ட விரும்புகிறேன்


உள்ளிருக்கும் உன்னை காண

 விழைகிறேன், ஒரு பிடி சோறு போல

 உள்ளங்கையால் அளக்க

 நினைக்கிறேன்


என் அடையாளம் இழக்கிறேன் நீ

 விலகிய பின் உயிர் துறக்கிறேன் 


ஒரு நொடியும் போதும் நீ

 என்னிடமிருந்து விலகி நிற்க


காண துடிக்கிறேன் உன்னை , நான்

 உடலால் செயலிழந்த பின் 


பற்ற நினைக்கிறேன் தானம்

 கொடுத்து

 இன்னொருவரின் தனம் சிறக்க


ஆண் பெண்ணென்று பேதம் காட்ட

 முடியாத

 உன்னை முழுதும் ஏற்கிறேன் என்

 ஆயுள் வரை


 விழி மூடி வழி தேடினேன், 

உனக்கு மாற்று யாரென்று? 

விழி பிதுங்கி நின்றது தான் மிச்சம் 

வலியில் துடித்த உன்னை காப்பாற்ற

 வலை வீசி

 தேடுகிறேன் வழியை இன்னும் ,

மீண்டும் சோர்ந்தது நீயும் என் உடலும்


காதலர்களி்டம் மாறி மாறி தஞ்சம்

 புகுந்த நீ , 

அழகாய் எட்டியே நின்றாய் 

அவர்கள் தம் பெற்றோரிடமிருந்து


உன்னில் காதலுக்காக அம்பு விட்ட

 காதலர்களும் உண்டு


உன்னை காதலுக்காக

 சின்னமாக்கியவர்களும்

 உண்டு

உலக இதய தினம் by Kiruthika

  


Adada .. இன்று இதயத்திற்கு ..இதமான நாள் ..கவி தோய்த்த இரத்தம் பாயும் நாளங்கள்..சுத்தம்.

சித்தம் ...


இதயம் ..

இளைப்பாற -

கொஞ்சம் வழி காண..

துடித்ததும்..அதே இதயமே!!!


எது வேண்டுமோ..

அதை மட்டுமே ..

உள் அனுமதிப்போம்..!!!


நாவிற்கு -

இனிப்பு ,காரம் என ரெண்டுமே பழக்கமாக்கியதை போலவே- தான் 

வெற்றியும் ..

தோல்வியும் என 

விளக்கி கொள்வோம்!!!..


வலி தாங்க ..

வலிமை கூட்டி கொள்வோம் ...!!..


ஒற்றை பிள்ளையை ..

கண்ணும் கருத்துமாய் ..

பார்த்து கொள்வது போலவே ..

பக்குமாய் - பதமாக பதமாக ..

அணைத்து கொள்வோம் ..

அக்கறை சேர்ந்த அன்போடு!!!..


பின் ..

இதயம் -

தன்னாலே

இதமாகும் !...


மறுக்காமல்..

மறக்காமல்..

துடிக்கும் !!..

நேர்த்தியாய் !!!!...

கார்மேகம் by Chinna

 


அண்ணாந்து பார்க்கையில்

சட்டென்று முகத்தில் ஒரு நீர்த்துளி

அது மழைத்துளி குளிர்ந்த காற்று என்

 மேல் மோதி செல்கிறது


அந்தப் பள்ளத்தாக்கில் குயிலொன்று

 கூவிய சத்தம்

பாறைகளில் மோதி மோதி பவனி

 வந்து கொண்டிருந்தது


மாலை நேரத்தில் கார் மேகம் சூழ

அன்று அந்திமாலை விடுப்பில்

 இருந்தது

நேரம் ஆக ஆக சில்லென்று

 மழைத்துளி என் மேல்

நனைத்தும் நனைக்காத வாறு


என் மேனி மிருதுவான வெப்பத்தை

 நோக்கி மனம் அலைய சட்டென்று

 தோன்றுகிறாள் என்னுள் உள்ளவள்

கை கோர்த்து நடந்தோம்

குளிர் என்னை விட்டு விலகி பத்தடி

 தள்ளி நின்றது


இப்பொழுது அப்படி ஒரு உஷ்ணம்

கை கோர்த்தவாறு பாதை எங்கு

 போகிறது என்று தெரியாமல்

கால் ஒரு பக்கம் போக

மனம் வேறு திசையில் பயணிக்கத்

 தொடங்கியது


களிப்பில் வார்த்தை தொண்டையில்

மீன் முள் போல் சிக்கிக்கொள்ள


ஆதிமொழி, விழி மொழி

எண்ணத்தை கடத்துதல் போன்று

வார்த்தை கூடு விட்டு கூடு பாய்ந்தது


அந்த இரவு அப்படியே நீளாதா

என்று தோன்றியது அப்போதுதான்

சூரியன் மேல் எனக்கு வெறுப்பு

 தோன்றியது


அவள் அருகில் தோளோடு தோள் உரச


சட்டென்று அப்பா மின்விசிறி

 அணைக்க

அம்மா இன்னுமா தூங்குற டேய்

 எந்திரி


---சின்னா



உலக இதய தினம் by Vidhya Nivash

 


இரவில் தூங்கும் போது கூட

 தூங்காமல் என்னை காக்கும் இதயமே

 உயிரோடு இருக்கும் வரை பல நேரம்

 உன்னை துடிக்க துடிக்க செய்த மனம்

 வருந்தியது நீ கடைசியாக நின்ற

 பிறகு, அந்த மனம் குளிரும் படி

 இன்னொரு உடல் சென்று துடிப்பயா

 இந்த உலகம் துடிப்பு நிற்கும் வரை..


கண்ணால் கண்டத்தை உண்ண

 தூண்டும் உணர்வே ஒரு முறை சிந்தி

 கையளவு இதயம் எவ்வளவு தாங்கும்..


பணம் ,லட்சியம் என்று உறங்காமல்

 ஓடும் உடலே ஒரு நிமிடம் முறை சிந்தி

 கையளவு இதயம் எவ்வளவு தாங்கும்..


ஓயாமல் திட்டும் வாயும்,  மனமும் ஒரு

 நாள் சிந்திக்கும்  இந்த கையளவு

 இதயம் எப்படி நின்றது என்று..


கேட்டதில் பிடித்த செய்தி..

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம்

 செய்பவரை அரசு மாரியதையுடன்

 உடலடக்கம் செய்ய உத்தரவு

 போடப்பட்டுள்ளது.

Thursday, September 28, 2023

காரிருள் by Kiruthika

  


காரிருள்..


உன்னை..

ஏறெடுத்து ஏக்கத்துடன் ....

நாங்கள் நோக்க..!..

நீயோ ..

சற்று முன் அங்கேயும்..

இதோ..

இப்போது - இங்கேயும் ..

என பாசாங்கு..

செய்வது தான் முறையோ?!!.

நீ ..

கார்மேகமா இல்லை 

வெறும் கனவா ...

கண் திறந்ததும் -

கலைந்து போக ??!!!

கொஞ்சம் - நாங்கள் 

இளைப்பாற..

ஓர் இடத்தில் நின்று ..

கருணை காட்டு -

காதல் செய் -

எங்கள் மேல் ...

மழை கவிதை வார்த்து!!!

கார்மேக கள்வனே...!!!!...

விடிந்ததில் இருந்து..

இன்னும் வடியாமல்..

அடம் பிடித்தபடி ..

தலைக்கு மேல் வலம் வரும் ..கார்மேக

 கண்ணனுக்கு ..ஒரு ஆசை மடல் 👆..

கார்மேகக் கூட்டம் by Veena Shankar

  


தங்கள் கவிதையில் இளைப்பாற

 கார்மேகமாய் உருவெடுக்கலாமோ?


அங்கே கார்மேகம். இங்கே 

கருந்தேகம், 

தலையை பிளக்கும் வெயில்


 கார்மேகக் கூட்டம்


உன்னை கண்டு விட்டதில் ஆனந்தமே!

குளிர் காற்று என்னை லேசாக வருட, 

உன் தேகத்தை பலவாறு சித்தரித்து

 சிந்தனையை கூட்ட, 

கலைந்து விடுவேன் என்று நீயும்

 மிரட்ட, 

சரி, சரி, உன்னை காதலிக்கிறேன்

 என்று மனதினுள் சொல்லி உன்னை

 பூட்டி கொள்ள,

அதற்குள் அவசரமாய் காற்றோடு

 காதல் கொண்டு,

மணந்தவனை கொண்டது போல்

 சென்று விட்டாயே?

இதுவும் நியாயமா?

முதலில் காதலித்த நான்

 இருக்கையில் 

அவனோடு காதல் மொழி பேசி

 என்னை ஏமாற்றி தாடி வளர்த்த

 தேவதாஸ் போல் மாற்றி விட்டாயே!


அடுத்த முறையாவது என்னை

 ஏமாற்றாமல் வந்து விடு இங்கே


உனை மறவாத காதலி இங்கே உன்

 நினைவோடு என்றும்

Wednesday, September 27, 2023

காரிருள் by Vidhya Nivash

 

 

காற்றை இழுத்து போனாய், வெயிலை

 அள்ளி குடித்தாய். எங்கே போனது

 வானத்து வண்ண ஓவியங்கள் துள்ளி

 திரிந்த பறவைகளும் உன் சத்தம்

 கேட்டு கூட்டை அடைந்தது . ஏன் வந்த

 வேகத்தில் கொட்ட வேண்டியது

 தானே.ஏன் இந்த மூட்டம்

 கார்மேகங்களே. எடுத்ததை திருப்பி

 கொடு வேறெங்கும் கடத்தி செல்லதே.

 இந்த மாலை வேளை பலரின்

 நம்பிக்கை அடுத்த நாளின் தொடக்கம்

 அதை விட்டுக்கொடு. இரவில் வந்து

 உறவாடு போர்வை விடுத்து உன்னை

 அள்ளி பூட்டிக்கொள்வேன் .

மீண்டும் இறந்த சிலை by Veena Shankar

 


நாட்டை சுருட்டிய சிலை மனித

 நேயத்தையும் சுட்டது


சிலைகள் ஒன்றான குணத்தில்

 இருந்தாலும் மனிதன் வசம் இருக்கும்

 போது வீண் தான்

குறி சரியாக இருந்தாலும் தவறியது

 சிலை


மனம் சரியாக இருந்தாலும்

 சூழ்நிலையால் தவறுவான் மனிதன்

சுட்டவன் சிரித்தான் இங்கே

 சிலையாக, 

தான் சுட்டாதால் கிடைத்த

 விளம்பரத்தினால்


உயிர் விட்டவன் அழுதான் சிலையாக, 

தன்னை சுட்டவனின் குடும்பத்தை

 எண்ணி


மனிதநேயம் சிலையானது, அதை

 மறந்த மனம் சிறையானது

கூகுளுக்கு பிறந்த நாளா by Vidhya Nivash

 


கூகுளுக்கு பிறந்த நாளா !அதுவும்

 இருபத்திஐந்தா! 

இத்தனை காலமாக உன் வசம்

 நாங்கள் அடிமையா !!இல்ல இல்ல நீ

 தான் எங்கள் உயிர் நாடி.

எந்த பக்கம் திரும்பினாலும் கூகுள்

 கூகுள் ..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூகுள்

வாழ்த்தெல்லாம் இருக்கட்டும்!!

எனக்கும் வயசு ஆகுது .கொஞ்சம்

 பொறுமை இழக்குது. 

ஒரு நாளைக்கு இத்தனை முறை தான்

 என்னை கேள்வி கேட்க வேண்டும்

 அதுக்கு மேல கேட்டா நான் உங்கள

 கேள்வி கேட்பேன்.  இல்லன்னா நீங்க

 பணம் கட்டணும் வேறென்ன சும்ம

 சும்ம கேட்ட கேள்வியே கேட்டு

 கொஞ்சம் மண்டை குழம்புது .இதுல

 வேற நீங்க அடிக்கும் எழுத்த சேர்த்து

  அப்படியே நீங்க மனத்தில் இருப்பதை

 காட்ட வேண்டும் இல்லன்னா இந்த

 கூகுளுக்கு மூளையே இல்ல என்ற

 பெயரு.போதும் போதும் உங்க

 வாழ்த்துக்கள் என்னிடம் இருந்து

 எடுத்து எனக்கே வா!!


கூகுளுக்கு பிறந்த நாள் வாழ்த்து by Akhiladevi Kumaran

 



கூகுளுக்கு பிறந்த நாள் வாழ்த்து by Veena Shankar

 

 


அதன் பிறந்த நாள் கொண்டாடி அதன்

 அகவையை ஏற்ற, நம் அகவை

 குறையுதே!


 Google க்கு பிறந்த நாள் வாழ்த்து


என் வேலை பளுவை குறைத்தாய்


என்னை வீட்டிலேயே பாடம் படிக்க

 சொன்னாய் 


வழியறியா ஊருக்கு பாதை

 சொன்னாய்


பொழுது போக அறிவாய் உதவினாய்


பணமாற்றம் எளிதாய் கற்று

 கொடுத்தாய்


விடையறியா கேள்விக்கு விளக்கம்

 தந்தாய்


உன்னால் நேரம் சிறப்பாய்

 மிச்சமானது


நீ மேலும் பலவற்றை அறிமுகப்படுத்தி

 நாங்கள் வீட்டிலிருந்தே வளர உதவி

 செய்ய வேண்டி பிரார்த்தித்து

 உன்னை வாழ்த்துகிறேன் இந்நாளில்




இந்த நாளில் பிறந்த நாள் காணும்

 உன்னை அறியாத ஒரு சிலருக்காக


கடிதம் எழுத நினைத்து காகிதம் தேட,

 நீ நின்றாய் என் முன்னே Gmail ஆக


திசையறியா இடத்தில் சிக்கி

 கொண்டேன் இதோ இருக்கிறேன்

 என்றாய் Google maps ஆக 


சந்தேகத்தை உன்னிடம் பகிர்ந்தேன்,

 விடையும் தந்தாய் Google ல்


மொழியில் சொல் அறிந்து எழுத

 அறியா போது Google voice ஐ

 பிரசாதமாக்கினாய்



நீண்ட வாக்கியங்களை இலகுவாக

 தட்டச்சு செய்ய Google Document ஐ

 அறிமுகம் செய்தாய்


என்னுடைய நினைவுகளை நான் படம்

 பிடிக்க அதை மறுபடியும்

 நினைவுபடுத்தி காட்டுகிறாய் Google

 Photo வில்


என்னுடைய பொக்கிஷங்களை

 சேமிக்க உதவுகிறாய் Google Drive இல்


என் பொழுது போக நீயும் Google Play

 Store ஐ அளித்தாய்


படிவங்களை கையால் நிரப்ப நான்

 தவிக்கையில் உதயமானாய் Google

 Sheet ஆக


பண பரிவர்த்தனைக்கு வங்கி

 செல்லாமல் அனுப்பவும் Google Pay

 யில் வழி வகை செய்தாய்


வெளியே செல்லாமல் வீட்டிலேயே

 Google Classroom மூலம் கல்வி கற்று

 கொடுக்கிறாய்


எல்லாவற்றிற்கும் முன்னோடியாக பல

 விசயங்களை படமாக You Tube மூலம்

 காட்டுகிறாய்


உன்னால் நான் சோம்பித்

 திரிந்தேனோ? 

அல்லது  

நீ என் நேரத்தை

 மிச்சப்படுத்தினாயோ? தெரியாது. 


இருவரின் மனம் இடம் மாறியது .

 மனிதனும் இயந்திரமும், மொத்தத்தில்

 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.


எது முடங்கினாலும் நம் இணை

 பிரியாது எதிர்காலத்தில் என்ற

 நம்பிக்கையுடன், பிறந்த நாள் காணும்

 உனக்கு அர்ப்பணம்

Monday, September 25, 2023

இந்த வார படமும் கருத்தும் by Vidhya Nivash

 


இன்றைய சூழ்நிலைக்கேற்ற படம்


நேற்றைய செய்தி உலுக்கியது

 அனைவரையும் கொஞ்சம்


பார்ப்பதற்கு பட்டுமெத்தை என்றாலும்

 நூலிழையில் மனம் தடுமாற எங்கும்

 ஆபத்து நிறைந்த வாழ்க்கை சரியான

 ஆதரவு, அரவணைப்பு குடும்பத்தில்

 இல்லையேல் மரணமே !!

இந்த வார படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


நடப்பது .. நடந்தே தீருவது ..

 என்று முடிவெடுத்தவனுக்கு,


கத்தி, கயிறு, ரோஜாப்பூ

 மெத்தை எல்லாம் ஒன்று

 தானே!


நின்றால் தான் ஆபத்து.. 

நட ராஜா… நீ நட ராஜா… !

இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar

 


எந்த கரடு முரடான பாதை

 ஆனாலும் சமநிலை

 நோக்கே சரியானது


வலியும் வலிமையும் ஒரே

 கோட்டில்


வாழ்க்கை கடந்து செல்ல,

 கடக்கும் பாதை

 எதுவானாலும் கவனம்

 கொண்டால் கடந்து விடலாம்

 இலகுவாக

எது இனிமை by Veena Shankar

 


 எது இனிமை


கதிரவனின் ஒளியில் பிறந்த பூவா?


அதில் ஒளிந்திருக்கும் தேனா?


தேனை மட்டும் பிரித்தெடுக்கும்

 தேனீயா?


பூ மீது அமர்ந்திருக்கும் வண்ணத்துப்

 பூச்சியா?


தேனியின் உழைப்பை சுரண்டும்

 மனிதனின் மூளையா?


இவற்றை எல்லாம் படைத்த கடவுளா?


காலத்தின் கட்டாயம் எதுவாகிலும்

 அழியாத இயற்கையின் தரிசனமும்

 அழகே!

மலருக்கு வலிக்காமல் அதன் மேல்

 சலிக்காமல் அமர்ந்த வண்ணத்து

 பூச்சி

மலரும் கனத்தது

 வண்ணத்துப்பூச்சியின் வரவால் 


வண்ணத்துப்பூச்சியும் கவர்ந்தது

 மலரின் அழகை


ஒன்றையொன்று விஞ்சிய அழகில்

 மறந்தது தங்கள் நிலை, படமானது

 மனிதனின் கரங்களுக்கு

 காலையில் மலர்ந்த பூவே உன் பெயர்

 என்ன?


பொதுப்பெயர் கொண்டு உன்னை

 அழைத்தாலும் மனிதனை போல நிறம்

 மாறுவாயோ?

மகுடமாக மகுடியாக by Veena Shankar

 


ஆசையின் விளிம்பில் பரிதவிப்பு எதற்கு?


பற்றவா? விற்கவா? பகட்டிற்கா ? தொட்டு பார்க்கவா? அணிகலனாய் பூட்டவா?

நான் பலவாறு உருமாறி வந்தாலும் என்னை உருமாற்ற நினைக்கும் பெண்கள் கூட்டம்


அடி வாங்கினாலும் அழகாய் தெரிவது பெண்களின் மேனியிலே

இல்லாதவருக்கு மகுடமாகவும் இருப்போருக்கு மகுடியாகவும்


கண்ணில் தெரிவோருக்கு அணிகலனாகவும் தெரியாதோர்க்கு இருப்பாகவும்


நினைப்போருக்கு மறதியாகவும் நினையாதோருக்கு கொடையாகவும்


பெற்றோருக்கு பரிதவிப்பாகவும் உற்றாருக்கு உறுதுணையாகவும்


அணிவோருக்கு அழகாகவும் சுகந்தமில்லாற்கு வலியாகவும் பிறக்கும் சென்னிறமே! நீ கிடைப்பதும் அரிதே சாமானியனுக்கு

Sunday, September 24, 2023

தாயும் சேயும் by Veena Shankar

 


குழந்தை பருவத்தில் அனுபவிக்கும்

 சுகத்தில் இதுவும் ஒன்று

தாயாய் இருக்கும் போது சேயாய் மடி

 மீது சாய ஆசை


சேயாய் இருக்கும் போது கற்பனையில்

 தாய் போல் மாறி விட ஆசை


தாய் மடியில் துயில பல காரணங்கள்

 சொல்லவும் ஆசை


சேய் மடியில் துயில பல முறை

 முயன்று தோற்று போனதும் உண்மை


பல கதைகள் தாய் சொல்லி சேய்

 கேட்டு துயில் கொண்டாலும் அந்த

 தாயின் மடியும் சேயின் அன்பும்

 கிடைக்குமா எதிர்காலத்தில்?


பற்றுதலும் பற்றிக் கொள்வதும் 

அறிந்ததும் அறியாமலிருப்பதும்

Saturday, September 23, 2023

வலி நிவாரணிகளே by Vidhya Nivash

 


படித்ததில் பிடித்தது..

புத்தர் துறவு பூண்டத்திற்கு  தந்த

 விளக்கம் பிம்பிசாரருக்கு ..


புறநிலை பொருட்கள் தருவது

 இன்பமா இல்லை வெறும் வலி

 நிவாரணிகளே !அதை இன்ப ஊற்று

 என்று எந்த அறிஞன் ஏற்றுக்

கொள்வான்.


கோடை காலத்திற்கு தேவைப்பட்டது

 குளிருக்கு உதவா,அது போலவே

 லாபம் நட்டம்,இன்பம் துன்பம்,

ஆளுமை அடிமை,மகிழ்ச்சி வருத்தம்

 எதுவும் நிலையானது அல்ல.இந்த

 பொருள் தேடலும் நிலையான

 மகிழ்ச்சியையும் அமைதியையும்

 தருமா!! 

முதுமைக்காக காத்திருங்கள்! அது

 நிலையற்றது இந்த உறுதியான

 இளமையை விடுத்து எதற்காக

 நிலையற்றதிற்கு காக்க வேண்டும்

இரக்கமுள்ளவருக்கு இளமை,முதுமை,

குழந்தை என்ற வேறுபாடு இல்லை.

அறவோரின் வழியே சிறப்பு.

யாரிடம் சொல்ல by Veena Shankar

 


மனதில் உள்ள வலியை யாரிடம்

 சொல்ல


ஆழ் மனதில் பதிந்த கற்பனையை

 கருத்தாக்க முடியாமல் தவிப்பதை

 சொல்லலாமா?


சொந்த வீட்டிலே பாசத்திற்கு

 கைதியாய் போனதால் பரிதவிப்பதை

 சொல்லலாமா?


என் மனதை புரிந்து கொள்ள முடியாத

 உறவுகளை பற்றி சொல்லலாமா?


நானும் என்னையே வெறுத்து மரத்துப்

 போன உள்ளத்தால் மறந்த கதையை

 சொல்லலாமா?


பகட்டுக்காக செல்வம் இருந்த போதும்

 அதை அனுபவிக்க தெரியாமல்

 துடிப்பதை சொல்லவா?


சுதந்திரமாய் திரியும் பறவையை பற்றி

 சொல்லவா?

Friday, September 22, 2023

படித்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


புத்தர் எப்படி துறவு பூண்டார் என்றால்

 அவர் கண்ட அந்த மூன்று காட்சிகள்

 அவரை துறவரத்திற்கு இழுத்தது

 என்பதே அனைவரும் அறிந்தது.அவர்

 கருவில் உண்டான முதலே அவர் ஒரு

 ஞானியாக, குடும்பத்தை துறப்பார்

 என பலவிதத்தில் அறியப்பட்டது . ஒரு

 காலக்கட்டத்தில் இளவரசராக போரை

 தவிர்க்க குடும்பத்தார் துன்புறக்

கூடாது என தான்விரும்பியே

 துறவை மேற்கொண்டார். இளமையில்

 இருந்தே பல கேள்விகள் ஏன் நம்

 வேலையை பிறர் செய்கிறார்கள்

 முதல் பிற உயிரை துன்புறுத்த கூடாது

 வரை நீண்ட அவர் சிந்தனைகள்

 நம்மையும் சிந்திக்க வைக்கிறது.

புத்தரும் அவரது தம்மமும் புத்தகத்தில்

 ஒரு வரி பசித்த நாய்கள்

 எலும்பின்மேல் இருந்து கொண்டே

 பட்டினிக் கிடத்தல் போல ,எதையும்

 அனுபவித்தும் திருப்தியுறுவதில்லை

 மேலும் வளரும் புறப்பொருள்

 தேடல்கள் இன்பமா . 

 தொடரும்...

சிணுங்கல் by Veena Shankar

 


சிணுங்கல்


"ச்சீ விடுங்க. உங்களுக்கு வேறு வேளை இல்லை" என்று சொன்னாள் விஜி, தன்னை கணவன் வருடுவதை உணர்ந்து. ஒரு சில நிமிடத் துளிகள் சென்றன. மீண்டும் அப்படியே சிணுங்கினாள் விஜி. இன்னும் சில துளிகளில் மீண்டும் அவன் தன்னை வருடுவதை உணர்ந்து 'லபக் ' என்று கையில் சிக்கியதை தன் வசமாக்கினாள் விஜி. அப்போதே மேல் படுக்கையில் படுத்திருந்த ஒரு பெண் 'குய்யோ முய்யோ' என்று கத்த, அதிர்ந்து எழுந்தாள் வேலை பளு காரணமாக ஆழ்ந்து உறங்கிய விஜி. தான் படுத்திருப்பது ரயில் பெட்டியில் என்பதை நிமிடத்தில் தெரிந்தவள், மேல் படுக்கையில் இருந்த பெண்ணை பார்த்து அசட்டு சிரிப்பு உதிர்த்தாள். அவளின் மேலாடை கீழ் படுக்கையில் படுத்திருந்த விஜியை வருட, தான் வீட்டில் படுத்திருப்பதாகவும் தன் கணவன் தான் தன்னை வருடினான் என்று தவறாக நினைத்தாள். அவள் வசமாக்கிய ஆடையை அப்பெண்ணிடமே திருப்பி தந்தாள். அதற்குள் நித்திரை கலைந்த விஜியின் கணவனும் நடந்த விவரத்தை அறிய நமுட்டு சிரிப்பை விஜிக்கு காட்டினான். 


வருடலும் சுகமானது, சமயத்தில் நகைச்சுவையானது.

Thursday, September 21, 2023

எங்கு போவீர் by Vidhya Nivash


 

கரைபுரண்டோடும் ஆற்று நீர் பரந்து, 

  விரிந்து, நெளிந்து ஓடும்

தண்ணீர்.எங்கு போவீர் !முதலும்

 முடிவும் காண கூட வரவா!

அதன் ஓடும் சத்தம் கேட்க கேட்க எதோ

 செய்கிறது.நிலைக்கொள்ளாமல்

ஓடும் நீரும் மனமும் சேர்ந்து 

சங்கமமாக எங்கும் நிசப்தம்.காவேரி

 ஓடும் பாதை எங்கும் அதன் தடத்தை

 நுகரமுடியும்.இரு மருங்கிலும்

 மரங்களின் பேச்சு கசகசக்க. அதுவே

 வறட்சியில் சொல்லமுடிய

 அவலம்.என்றும் விரிந்து, பரந்து ஓட

 வாழ்த்துகிறேன் நீண்டு நெடுந்தூரம்

 ஓடு ஓய்வு இல்லாமல் ஓடி பட்டி தொட்டி

 நிறைய வாழ்த்துகிறேன்.

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் by Veena Shankar

 


ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்


நம் அறியாமை விலக்க 

தன் ஆற்றலை கொடுத்து

நம்மை இணைக்கும் ஜீவன்

தன் ஈடுபாட்டை

நமக்கு உணர்த்தி

தன் ஊண் துறந்து

நம் எதிர்காலத்திற்கு

 ஏணி போல் நின்று 

ஏறி மிதித்தாலும் தாங்கும் இதயம் போல்

தன் ஐம்புலன்களையும் பணயமாக்கி 

நமக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டும் 

ஓர் உயிரும் ஆசிரியர்களே!

Wednesday, September 20, 2023

அதிகாலை by Vidhya Nivash

 


ஒருபக்கம் வெளிறிய வானம்

 மறுபக்கம் கருமை எத்தனை அழகு.

யாரோ திரைச்சீலையை பிடித்து

 விலக்க மெல்ல விடியும் பொழுது.

 உற்று பார்த்தால் நல்ல எடுப்பான

 மூக்குடன் மனிதனின் முகம்.

 பார்ப்பவர் பார்வைக்கும் ,

 சிந்தனைக்கும் மாறும் சித்திரம் வான்

 என்னும் மாயநதியில் உங்கள்

 பூதக்கண்ணாடியை கூர்மையாக்கி

 ரசிக்க இவள் விரிவாள்,

 மறைவாள்,கரைவாள் காற்றில்....


வினையும் விளைவும் by Veena Shankar

 


வினையும் விளைவும்


வகுப்பாசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணவர்களுக்கு இராமாயண கதையை வாரம் ஒரு நாள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அன்றோடு இராமாயண கதை முடிவடைய இருப்பதாகவும் அதனால் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக வகுப்பிற்கு வர வேண்டுமென்றும் முதல் வார வகுப்பிலேயே சொல்லியிருந்தார். தவறாமல் வகுப்பிற்கு வந்தால் , வரும் அனைவருக்கும் சிறப்பு பரிசு தருவதாகவும் சொல்ல, அன்றைய தின வகுப்பிற்கு மாணவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருந்தனர்.


ஆசிரியரின் பேச்சை மாணவர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். 


ஆசிரியர் வகுப்பு முடியும் வேளையில் தன்னிடம் ராமர் சிலையும் ராவணன் சிலையும் இருப்பதாகவும் அதில் அவரவருக்கு எந்த சிலை வேண்டுமோ அதை தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கு தனித் தனி வரிசையில் அமைதியாக நிற்குமாறும் மாணவர்களை அறிவுறுத்தினார். மேலும் அந்த சிலையினை அவரவர் வீட்டிற்கே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் சொன்னார். 

அவர் அப்படி சொன்னதும் மாணவர்கள் கூட்டம் தங்களுக்கு விருப்பமான சிலைக்காக வரிசையில் அமைதியாக நின்றனர்.

 

பலரும் ராமனின் சிலைக்காக வரிசையில் நிற்க, ராவணனின் சிலைக்கு வரிசையில் ஒரே ஒரு மாணவன் மட்டும் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்தே அதை கவனித்த ஆசிரியர், அந்த ராவணனின் சிலைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவனை அழைத்து எல்லோர் முன்னிலையிலும் அதற்கான காரணத்தை கேட்டார்.  


"எல்லோரும் ராமன் சிலைக்காக வரிசையில் நிற்கிறார்கள். நீ மட்டும் ஏன் ராவணன் சிலைக்காக நின்றாய்?" என்றதும் " அதற்கு ராமனைபற்றி எல்லோரும் நன்கு அறிவர். ராவணனை பற்றியும் அறிந்திருப்பார்கள். ஆனால் தெய்வீக ராமனை எதிர்க்க ராவணன் எவ்வளவு போராடியிருப்பான்? வாழ்க்கையில் போராடுவது முக்கியம். அதில் கிடைக்கும் வெற்றியோ தோல்வியோ அது அவரவர் முன் வினையை பொறுத்தது. போராடும் எண்ணம் மிகச் சிறந்தது தானே?


 இராவணனுடைய எண்ணம் தவறாக இருந்ததினால் தான் இராமனால் அழிக்கப்பட்டான். அவனுடைய சிலையை தினமும் நான் பார்க்கும் போது அவன் செய்த செயல்கள் என் நினைவுக்கு வந்து அதனால் விளையும் அழிவுகளையும் எனக்கு நினைவு படுத்தும்.


 இன்றைய சூழலில் என்னால் ராமனாக வாழ முடியாது. இருந்தாலும் இராவணனாக நான் மாறி விடக் கூடாது என்பதற்காகவே பலரும் விரும்பாத இராவணனின் சிலைக்காக நின்றேன். மேலும் எல்லோரும் ராமன் சிலையை தான் விரும்புவர் என்று எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஒருவேளை சிலை கிடைக்காமலும் போகலாம். நம் இதிகாசத்தில் இடம் பெற்றிருந்த ஒருவரின் சிலையை நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன். அது ராமனோ? ராவணனோ? இந்த விசயம் எனக்கு தவறாக தோன்றவில்லை. " என்று அந்த மாணவன் பதில் சொன்னதும் ஆசிரியருகக்கே அவன் சொன்ன விடை புதிய கோணத்தில் இருந்தாலும் அவனுடைய எண்ணம் தெளிவாக இருந்த காரணத்தினால் முதலில் ராமனின் சிலையை கொடுப்பதற்கு முன் ராவணனின் சிலையை அம்மாணவனுக்கு கொடுத்து அனுப்பினார்.


போராட்டம் இல்லாத வாழ்க்கையும் ஓட்டம் இல்லாத உடம்பும் வீண் தானே?

Sunday, September 17, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


தலை கவிழ்ந்து நிற்பதால் ஆண் கோழையுமில்லை, அவன் தோற்றுபோவதுமில்லை. உண்மையாக தன் துணையின் புரிதலுக்காக அடிபணிபவனே! அவளின் காதலுக்கும் அடிமையானவனே!


 கோடி கொடுத்தாலும் ஈடு செய்ய முடியா பந்தம், சிலருக்கு சூழ்நிலையால் தவிப்பினிலே! 


ஆனந்த குவியல் போட்டவனும் உண்டு, 


அரச மரத்தை சுற்றியவனும் உண்டு இவ்வுலகில்

Friday, September 15, 2023

வியப்பு by Vidhya Nivash


 ஆச்சரியம் கலந்த உண்மை.சிறுகூடு

 பலரின் முயற்சியில் அல்லது ஒரே

 குடும்பத்தாரோ தெரியவில்லை சிறுக

 சிறுக கட்டிய வீடு இல்லை பிரசவ

 மருத்துவமனை.பல குஞ்சுகள் கண்

 திறந்து உலகை பார்த்த இடம் .பிரசவ

 காலத்தில் அடைக்காத்து

 குஞ்சுப்பொரிக்க என்று ஒரு கூடு

 மறைவாக யாரும் நடமாட

 இடம்.எவ்வளவு சின்ன

 உயிரென்றாலும் அதன் புத்தி கூர்மை

 வியக்க செய்கிறது.

நிழலும் நிஜமும் by Veena Shankar

 


 சாய்ந்திருப்பது யார் மரமா? மனிதமா?

 மானத்தை துறக்க ஆசையில்லை


மரணத்தை சுவைக்க ஆசையில்லை


உறவுகளை மறுக்க ஆசையில்லை


நட்பை துண்டிக்க ஆசையில்லை


குழப்பத்தோடு இருக்க ஆசையில்லை


யாரையும் வஞ்சிக்க ஆசையில்லை


தீரா வலிகளோடும் தேடா வாழ்வோடும்

 காத்திருந்தேன் மாலை

 செங்கதிரவனோடு 


அவள் வருவாளா? என்று நான்

 மென்மேலும் சிறக்க

 அந்தி சாயும் நேரம் மரம் சாய்ந்தது. 


மரம் சாய்ந்ததால் மரத்தில்

 அமர்ந்திருந்த நானும் சாய்ந்தேன். 


நான் சாய்ந்ததால் என்

 கண்ணோட்டமும் சாய்ந்தது. 


என் கண்ணோட்டம் சாய்ந்ததால்

 பிறரை மதியாமல் நானும்

 வாழ்க்கையில் சாய்ந்தேன்

நிழலும் நிஜமும் போட்டியிட்டால்

 வெற்றி யாருக்கு?


மதமும் மனிதமும் போட்டியிட்டால்

 வெற்றி யாருக்கு?


வேட்கையும் ஏழ்மையும் போட்டியிட்டால்

 வெற்றி யாருக்கு?


உறுதியும் காலமும் போட்டியிட்டால் வெற்றி யாருக்கு?


தன்னிலையும் ( நீயும்) முன்னிலையும் (நானும்) போட்டியிட்டால் வெற்றி யாருக்கு?

Thursday, September 14, 2023

புகலிடம் by Vidhya Nivash


 தண்ணீரின் நடுவே உன்னை யார்

 வந்து நட்டு வைத்தனர்.எங்கும்

 தண்ணீர் இவற்றுக்கு நடுவில்

 எப்படியோரு மணற் மேடு.அதன் மேல்

 பல பறவைகளின் உறைவிடம்

 வேரூன்றி நிற்க.பல தேசத்து

 பறவைகள் வந்து இளைப்பாற எப்படி

 ஒரு அழகிய சொர்க்கம் இந்த

 நதியிலே.எங்கள் முன்னோரின்

 எச்சத்தில் முளைத்த அன்னை

 இவள்.யாருக்கும் சொந்தமில்லை

 அதில் உறையும் அனைத்திற்கும்

 சொந்தம் கொள்ளும் அன்னை

 அவள்.என்று பாடிச்செல்லும் பறவை

 கூட்டம்.ஓடும் நதியில்

 நிலைக்கொண்ட புகலிடம்..

படமும் கருத்தும் by Veena Shankar

 


இருவரும் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையில் பிரிய வேண்டிய கட்டாயமேயானாலும் காலம் காட்டுவதில் மட்டும் நாங்கள் பிரிவதில்லை




பிரிவு என்றிருந்தாலும் நாங்கள் சேரும் இடங்களும் உண்டு


சேர்ந்தாலும் எங்களுக்குள் தனித்துவம் என்பது உண்டு


தனித்துவம் கொண்டாலும் கடந்தது கடந்தது தான்


கடந்து போகும் இரவும் பகலும் நாளைய வளர்ச்சிக்காகவே 


வளர்ச்சியிருந்தாலும் உள்ளிருக்கும் எங்கள் வடிவத்தில் மாற்றம் இல்லை


மாற்றம் வேண்டுமெனில் நல்லவைக்கு மட்டுமே செவி கொடுத்து, தீயவைகளுக்கு விடை கொடுங்கள் எங்களை போல்


என்ன நடந்தாலும் ஓடும் திடம் கொண்ட எங்களை போல் வாழ்ந்திடுங்கள்

Wednesday, September 13, 2023

நீரும் உயிரும் by Vidhya Nivash

 

 

தண்ணீரில் மிதக்கும் உல்லாச வீடுகள்

 ஒரே கோட்டில் அடுக்கி வைத்தார்

 போல் மிதக்க மிதக்க பரவசம்

 சுற்றியும் தண்ணீர் .தண்ணீரில்

 விளையாடும் மீன் எங்கே செல்லும்

 விடுமுறைக்கு முகவரி தெரியாமல்

 சுற்றி ,ஓடும் ஓடத்தில் ஏறி மறுகரை

 சேருமா அல்லது ஓடும் தண்ணீரில்

 அடித்து கடலில் சங்கமமாகி வேறு

 தேசம் செல்லுமா?

நீரும் அதில் வாழும் உயிரும் எங்கே

 போகும்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


கருமையில் மிளிர்ந்த பறவை


மரத்தின் ஊடே கருமையில் செதுக்கிய

 குருவியின் நிழல்


பின்னணியில் இருப்பது கருமை

 நிறமா ? இல்லை மரத்தை

 செதுக்கியதால் அதன் ஊடே தெரியும்

 நீல வானமா?

Tuesday, September 12, 2023

யாரென்று? by Veena Shankar

  


யாரென்று?


பூவும் கயலும் 

போட்டிபோடுகிறது அழகி யாரென்று?


நீரும் நிலமும் ஏங்குகிறது அவைகளை

 தாங்குவது யாரென்று?


பசுமையும் படமும் தவிக்கிறது

 காண்போரை கவர்வது யாரென்று?


படைத்தவனும் காட்சிபடுத்தியவனும்

 மிளிர்கிறார்கள் அறிவாளி

 யாரென்று?

 தெளிந்த நீரோடை என்றாலும்

 தூசியினால் மாசுபடுவதும் உண்டு


கண்ணாடி பிம்பத்தில்

தூண்டிலில் சிக்குவது பூவா? மீனா? 

முகர்ந்து பார்த்த கயலும் குனிந்து

 போனது


நிமிர்ந்து பார்த்த இலையும் உதிர்ந்து

 போனது


தெளிந்து ஓடும் நீரும்

குளிர்ந்து போனது


சாய்ந்து பார்த்த தண்டும்

சரிந்து போனது


கடந்து வந்த மண்ணும்

கலந்து போனது


தவழ்ந்து வந்த மேகம்

கரைந்து போனது


இழந்த பசுமை பெற கடந்து போனது

பூவை நுகர எந்த அறிவும்

 தேவையில்லை. ஐந்தறிவான மீன்

 என்ன ? ஆறறிவான மனிதன் என்ன?

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...