ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்
நம் அறியாமை விலக்க
தன் ஆற்றலை கொடுத்து
நம்மை இணைக்கும் ஜீவன்
தன் ஈடுபாட்டை
நமக்கு உணர்த்தி
தன் ஊண் துறந்து
நம் எதிர்காலத்திற்கு
ஏணி போல் நின்று
ஏறி மிதித்தாலும் தாங்கும் இதயம் போல்
தன் ஐம்புலன்களையும் பணயமாக்கி
நமக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டும்
ஓர் உயிரும் ஆசிரியர்களே!

No comments:
Post a Comment