இருவரும் மனதை திறந்தால் மட்டுமே பயன்
வாய் திறந்து விடை கொடுப்பதா?
திறப்பதால் கூர்முனை கொண்டு காயப்படுத்துவதா?
கேள்வியும் திறப்பவரிடத்திலே
கணவன் மனைவியின் பந்தம்
அண்ணன் தங்கையின் பாசம்
அண்ணன் தம்பியின் உறவு
சொல்கிறதோ இந்த படம்?
ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் கையில் இருக்கும் வரை இருவருக்கும் அடுத்தவரால் சுமையே அன்றி சுகமில்லை
வாழ்க்கையும் இப்படித்தான், யாரும் யாருக்கும் பயன்படாமல் தொலைக்கிறோம் சிறந்த தருணங்களையும் மீறி
பெண்ணுக்கும் ஆணுக்குமான சுதந்திரத்தின் பிணைப்பு, மீறினாலும் வலியே
வாழ வழி தெரியாமல் போனாலும் பொறுமை வெல்லும் ஓர் நாள், இந்த பூட்டிற்கான திறவுகோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
வேண்டுமா சுதந்திரம்? காத்திருக்கிறது திறவுகோல்
உணர்வை வெட்ட ஒன்று, உறவை பூட்ட (நீட்டிக்க) ஒன்று
மூன்றும் வளைந்து கொடுத்து வளையங்களில் சிக்கியதால், நானே சிறந்தவன் என்ற மமதையில் அதன் பயனை இழக்கின்றன. வாழ்க்கை சக்கரம் இனிதாய் சுழலும் போதும் இது திசை திருப்பும் மனிதனை

No comments:
Post a Comment