Sunday, September 24, 2023

தாயும் சேயும் by Veena Shankar

 


குழந்தை பருவத்தில் அனுபவிக்கும்

 சுகத்தில் இதுவும் ஒன்று

தாயாய் இருக்கும் போது சேயாய் மடி

 மீது சாய ஆசை


சேயாய் இருக்கும் போது கற்பனையில்

 தாய் போல் மாறி விட ஆசை


தாய் மடியில் துயில பல காரணங்கள்

 சொல்லவும் ஆசை


சேய் மடியில் துயில பல முறை

 முயன்று தோற்று போனதும் உண்மை


பல கதைகள் தாய் சொல்லி சேய்

 கேட்டு துயில் கொண்டாலும் அந்த

 தாயின் மடியும் சேயின் அன்பும்

 கிடைக்குமா எதிர்காலத்தில்?


பற்றுதலும் பற்றிக் கொள்வதும் 

அறிந்ததும் அறியாமலிருப்பதும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...