குழந்தை பருவத்தில் அனுபவிக்கும்
சுகத்தில் இதுவும் ஒன்று
தாயாய் இருக்கும் போது சேயாய் மடி
மீது சாய ஆசை
சேயாய் இருக்கும் போது கற்பனையில்
தாய் போல் மாறி விட ஆசை
தாய் மடியில் துயில பல காரணங்கள்
சொல்லவும் ஆசை
சேய் மடியில் துயில பல முறை
முயன்று தோற்று போனதும் உண்மை
பல கதைகள் தாய் சொல்லி சேய்
கேட்டு துயில் கொண்டாலும் அந்த
தாயின் மடியும் சேயின் அன்பும்
கிடைக்குமா எதிர்காலத்தில்?
பற்றுதலும் பற்றிக் கொள்வதும்
அறிந்ததும் அறியாமலிருப்பதும்

No comments:
Post a Comment