Adada .. இன்று இதயத்திற்கு ..இதமான நாள் ..கவி தோய்த்த இரத்தம் பாயும் நாளங்கள்..சுத்தம்.
சித்தம் ...
இதயம் ..
இளைப்பாற -
கொஞ்சம் வழி காண..
துடித்ததும்..அதே இதயமே!!!
எது வேண்டுமோ..
அதை மட்டுமே ..
உள் அனுமதிப்போம்..!!!
நாவிற்கு -
இனிப்பு ,காரம் என ரெண்டுமே பழக்கமாக்கியதை போலவே- தான்
வெற்றியும் ..
தோல்வியும் என
விளக்கி கொள்வோம்!!!..
வலி தாங்க ..
வலிமை கூட்டி கொள்வோம் ...!!..
ஒற்றை பிள்ளையை ..
கண்ணும் கருத்துமாய் ..
பார்த்து கொள்வது போலவே ..
பக்குமாய் - பதமாக பதமாக ..
அணைத்து கொள்வோம் ..
அக்கறை சேர்ந்த அன்போடு!!!..
பின் ..
இதயம் -
தன்னாலே
இதமாகும் !...
மறுக்காமல்..
மறக்காமல்..
துடிக்கும் !!..
நேர்த்தியாய் !!!!...

அருமை கிருத்திகா
ReplyDelete